Categories: latest news

Rajinikanth: நடிகரை அசிங்கப்படுத்திய ரஜினி!.. சம்பளம் எவ்வளவுன்னு சொன்னது தப்பா போச்சே!..

Rajinikanth: சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும். இப்போதெல்லாம் விஜய், ரஜினியெல்லாம் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்கள். அதுவும் விஜய் 200 கோடி சம்பளம் வாங்குகிறார். ஓடிடி, பேன் இண்டியா படங்கள் உருவான பின் 100 கோடி சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டது.

கல்கி 2898டி இரண்டு பாகத்திலும் நடிக்க கமலுக்கு 150 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். நடிகர்களுக்கு பின் நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பார்கள். நடிகர், நடிகைகளுக்கு பின் இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், படத்தில் நடித்த குணச்சித்திர நடிகர், நடிகைகள் என போகும்.

குணச்சித்திர நடிகர்கள் மற்றும் சில காட்சிகளில் வரும் நடிகர்களுக்கு குறைந்த சம்பளமே கொடுப்பார்கள். ஒருநாள் ஒரு காட்சியில் நடித்துவிட்டு 500 ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலரும் இப்போது சினிமாவில் இருக்கிறார்கள். காலை, மாலை 2 வேளை சாப்பாடு மற்றும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

#image_title

அவர்களுக்கு என்ன மார்க்கெட் இருக்கிறதோ அதை பொறுத்து சம்பளம் மாறுபடும். இந்நிலையில்தான், திரைப்பட மற்றும் சீரியல் நடிகர் பூ விலங்கு மோகன் ரஜினியிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார். நான் பாபா படத்தில் ஒரு நாள் நடித்தேன். அப்போது ‘டிவி சீரியலில் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்?’ என ரஜினி கேட்டார்.

’8 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள்’ என்றேன். ‘அவ்வளவுதானா?’ என கேட்ட ரஜினி ‘ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடிப்பீர்கள்?’ என கேட்டார். காலையில் போனால் இரவு ஆகிவிடும் என்றேன். ‘ஐயோ. ஒரு நாள் முழுக்க வேலை செய்து இவ்வளவுதானா.. ரொம்ப கஷ்ட்ம்ல’ என சொல்லிவிட்டு நடிக்க போய்விட்டார்.

ஒரு மாதம் கழித்து அந்த படத்தில் நான் நடித்ததற்கான சம்பளம் செக்காக வந்தது. அதில் 8 ஆயிரம் என எழுதப்பட்டிருந்தது. நான் அதிர்ச்சியாகி போனேன். டிவியில் எனக்கு என்ன சம்பளமோ அதையே கொடுத்திருந்தார் ரஜினி. பாபா படத்திற்கு ரஜினிதான் தயாரிப்பாளர். நடிகரை தாண்டி அவர் ஒரு பக்கா பிஸ்னஸ் மேன் என சொல்லியிருக்கிறார் பூ விலங்கு மோகன்.

ராம் சுதன்

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

7 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

8 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

9 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

22 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

22 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago