Categories: latest news

ராமராஜனுக்கு இருக்கும் ஒரே கவலை இதுதானாம்! சின்னக் குழந்தை மாதிரி அழுகுறாரே

தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையுடன் கூடி மண் மணம் கமழும் வகையில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ராமராஜன். கரகாட்டக்காரன் படம்தான் அவரை வேறொரு புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது. கரகாட்டக்காரன் படம் ரிலீஸ் சமயத்தில் ரஜினி மற்றும் கமல் இவர்களின் படங்களும் ரிலீஸாக ராமராஜனின் கரகாட்டக்காரன் தான் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது.

அதை ரஜினியும் ஆச்சரியமாக பார்த்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. எம்ஜிஆர் மாதிரியே ராமராஜனும் தன் படங்களில் மது, புகை உள்ளிட்ட காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜனின் திருமணத்தை நடத்தி வைத்ததே எம்ஜிஆர் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராமராஜன் இருவரும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை நடத்தினார்கள். இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார். பின் கருத்து வேறுபாடு காரணமாக நளினியும் ராமராஜனும் பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள்.

ஆனால் இருவரும் பிரிந்தாலும் உள்ளத்தில் ஒருவருக்கொருவர் அதே பாசத்துடனும் அன்புடனும்தான் இருக்கிறார்கள். பிரிவுக்கு பிறகு இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தன் பிள்ளைகள் குறித்து ஒரு பேட்டியில் ராமராஜன் பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அவருடைய மகன் ஆடிட்டிங் முடித்து ஸ்காட்லாந்தில் ஒரு நல்ல உத்யோகத்தில் இருக்கிறாராம். அதை போல அவருடைய மகளும் எம்.காம்., பி.எல் முடித்து வக்கீலாக பணியாற்றி வருகிறாராம். மகனுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்களாம். ஆனால் மகளுக்குத்தான் இன்னும் குழந்தை இல்லை. அதுதான் என்னுடைய ஒரே கவலை. அவளுக்கும் ஒரு குழந்தை இருந்தால் சந்தோஷமாக இருக்கும் என கண்கலங்கி பேசினார் ராமராஜன்

ராம் சுதன்

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

44 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago