தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படியாக முன்னேறி தற்போது மிகச் சிறந்த நடிகராக உருமாறி இருக்கின்றார். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தனது மிமிக்ரி மூலமாக சினிமா பயணத்தை தொடங்கிய இவர் இன்று பலரும் கொண்டாடும் நடிகராக உயர்ந்து நிற்கின்றார். இவரின் வளர்ச்சி பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் ரிலீசாக உள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார்.
மேலும் அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கின்றார். இப்படத்தின் பாடல், டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை காண வேண்டும் என்று பலரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படம் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கின்றார்.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அது இல்லாமல் விபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்திலும், அடுத்ததாக சுதா கோங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வந்தது.
இது குறித்து சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் விரைவில் மலையாள சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மோகன்லால் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் மலையாள சினிமாவிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…