Categories: latest news

எல்லாரும் திட்றாங்க!. சூரி இனிமேல் அப்படி நடிக்கமாட்டார்!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்…

Actor soori: மதுரையிலிருந்து சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்த பல ஆயிரம் பேரில் சூரியும் ஒருவர். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பெயிண்ட், சுண்ணாம்பு அடிப்பது உள்ளிட்ட பல வேலைகளையும் செய்திருக்கிறார். இவருக்கு பலரும் உதவி செய்திருக்கிறார்கள்.

அஜித்தை வைத்து ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி ஆகிய படங்களை இயக்கியவரும், காமெடி நடிகருமான சிங்கம் புலிதான் இவரை சுந்தர் சியிடம் அறிமுகம் செய்து வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதுவும், கூட்டத்தில் நிற்கும் ஒரு சின்ன வேடம். நடிகராவதற்குக் முன்பு சினிமாவிலும் சூரி வேலை செய்திருக்கிறார். நடிகர்களுக்கு எடுபுடி வேலைகளையெல்லாம் இவர் செய்திருக்கிறார்.

பரோட்டா சூரி: சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சி சூரியை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதன்பின் ரசிகர்கள் அவரை பரோட்டா சூரி என அழைத்தார்கள். அதன்பின் விஷால், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் சூரி நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனுன் கூட்டணி போட்டு இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. வில்லேஜ் படம் என்றாலே ‘காமெடிக்கு சூரியை கூப்பிடு’ என இயக்குனர்கள் சொல்லுமளவுக்கு வளர்ந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் மதுரையில் அம்மன் என்கிற பெயரில் ஹோட்டல் தொழிலையும் துவங்கினார்.

விடுதலை: காமெடி நடிகராக இருந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக மாற்றினார். அந்த படம் ஹிட் அடிக்கவே இனிமேல் காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் என அறிவித்தார் சூரி. அடுத்து வெளிவந்த கருடம் படம் நல்ல வெற்றியை பெற்றது. இடையில் கொட்டுக்காளி படம் வந்தாலும் அந்த படம் ஓடவில்லை. ஏனெனில், அப்படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் குறும்படம் போல இயக்கியிருந்தார். இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்தும் இருந்தார். அதன்பின் விடுதலை 2 படத்தை முடித்துவிட்டு இப்போது மாமன் என்கிற படத்தில் சூரி நடித்து வருகிறார்.

கொட்டுக்காளி: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கொட்டுக்காளி பட இயக்குனர் வினோத் ‘சூரி அண்ணன் இனிமேல் கொட்டுக்காளி போல ஒரு படத்தில் நடிக்க மாட்டார். அந்த படத்தை நம்பி அவ்வளவு உழைப்பை போட்டார். ஆனால், ‘கருடன் மாதிரி இல்ல. இந்த படத்தை அவர் ஏன் பண்ணார்?’ என பலரும் கேட்டார்கள். அப்படி இருக்கும்போது இனிமே எப்படி அதுமாதிரி ஒரு படத்தில் அவர் அடிப்பார்?’ என கோமாக கேட்டிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

9 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

9 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago