Categories: latest news

பெண்களுடன் தொடர்பு?!.. விட்டுச் சென்ற மனைவி!.. மன உளைச்சலில் தவிக்கும் ஸ்ரீகாந்த்!…

Actor Srikanth: மாடலிங் துறையில் இருந்த ஸ்ரீகாந்த் சசி இயக்கத்தில் வெளிவந்த ரோஜாக்கூட்டம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ‘அட அழகாக இருக்கிறாரே’ என ரசிகர்கள் நினைக்க படம் நன்றாக ஓடியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். பம்பரக்கண்ணாலே, ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், ஜூட், போஸ், கனா கண்டேன், பூ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓடவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார். சில மாதங்களுக்கு முன்பு கூட தினசரி படம் வெளியானது. இந்த படமும் ஓடவில்லை.

இந்நிலையில்தான் போ…தை மருந்தை பயன்படுத்தி இப்போது சிறையில் இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஸ்ரீகாந்துக்கு இந்த பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. சினிமாவில் நடித்ததற்காக 10 லட்சம் சம்பள பாக்கியை கேட்டபோது அதற்கு பதிலாக போ…தை பொருட்களை கொடுத்து பழக்கிவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தார். இவருக்கு பின் இவரின் நடிகர் கிருஷ்ணாவும் கைதாகி இருக்கிறார்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ‘குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறது. என் மகனை பார்த்துக்கொள்ள வேண்டும்’ என ஸ்ரீகாந்த் சொல்லியிருக்கிறார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதற்கான காரணம் வெளியே கசிந்திருக்கிறது. ஸ்ரீகாந்த் நட்சத்திர ஹோட்டல்களுக்கு பார்ட்டிக்கு சென்றபோதுதான் அவருக்கு வந்தானாவுடன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வந்தனா ஸ்ரீகாந்தை விட பல மடங்கு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் அப்பாவுக்கு சில கல்லூரிகளும், பள்ளிகளும் இருக்கிறது.

வந்தானவை ஸ்ரீகாந்த் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது வந்தனா மீது காவல் நிலையத்தில் இருந்த புகார் காரணமாக திருமணம் செய்ய மறுத்தார். ஆனால், வந்தனாவோ ஸ்ரீகாந்தை விடுவதாக இல்லை. ஸ்ரீகாந்தின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். எனவே, அவரை திருமணம் செய்தார் ஸ்ரீகாந்த். ஒரு மகன், மகள் என குடும்ப வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.

இந்நிலையில், சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் ஸ்ரீகாந்த். அதில்தான் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு கொக்கன் போதைப்பொருளை பயன்படுத்திருயிருக்கிறார். அதோடு, அவருக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளை ஸ்ரீகாந்துடன் விட்டுவிட்டு அவரின் மனைவி வந்தனா அவரின் பெற்றோர் வீட்டிக்கே சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால்தான், சிறையில் இதுவரை ஸ்ரீகாந்தை சென்று யாருமே பார்க்கவில்லை என்கிறார்கள். மகனை ஸ்ரீகாந்தே கவனித்து வந்திருக்கிறார். இப்போது அவர் சிறையில் இருக்கிறார் ஜாமீனுக்காக விண்ணப்பித்திருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago