விஜயகாந்த் மீது யாராவது கோபப்பட்டா என்ன செய்வாருன்னு தெரியுமா? அவரே சொல்லிட்டாரே!

கேப்டன் விஜயகாந்த் தமிழ்த்திரை உலகில் அனைவரையும் அரவணைத்துப் போகக்கூடியவர். அதனால் தான் அவரை நடிகர் சங்கத்தின் தலைவர் ஆக்கினார்கள். அப்போதும் கூட அவர் நடிகர் சங்கத்துக்காக அயராது பாடுபட்டு கடன்களை எல்லாம் தீர்த்து வைத்து சாதனை படைத்தார்.

விஜயகாந்தைப் பொருத்தவரை அவர் ஒரு கருப்பு எம்ஜிஆர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரிடம் யாராவது உதவி என்று கேட்டுவிட்டால் கொஞ்சம் கூட தயங்காமல் செய்து விடுவார். அதே நேரம் அவரை யாராவது நேரில் பார்க்க வந்தால் சாப்பிடாமல் அவனை அனுப்ப மாட்டார்.

விஜயகாந்துக்கும், பாரதிராஜாவுக்கும் இருந்த நட்பைப் பற்றி சொல்ல முடியுமா? விஜயகாந்துக்கும் தேவாவுக்கும் இருந்த நட்பைப் பற்றி சொல்லுங்களேன் எனவாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

விஜயகாந்தோடு நட்பாக இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு எளிமையாக பழகக்கூடிய மனிதர்தான் விஜயகாந்த். யாருக்காவது லேசாக விஜயகாந்த் மீது கோபம் இருந்தாலும்கூட, வலியச் சென்று அவரிடம் என்னய்யா உனக்குக் கோபம்? ஏன் முகத்தைத் திருப்பிட்டுப் போறன்னு கேட்டு சமாதானம் செய்யக்கூடிய ஒரு வெள்ளை மனதுக்குச் சொந்தக்காரர் தான் விஜயகாந்த். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


ஒருவேளை கேப்டன் விஜயகாந்தைப் பற்றி அனைவரும் சிலாகித்துப் பேசக் காரணமும் அந்தக் குணமாகத் தான் இருக்கும். அது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு தமிழ்சினிமாவுக்கு பெரிய இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் உச்சத்தை நெருங்கியவர். இவரது எளிமை தான் இவருக்கு இந்த அளவு பேரையும், புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. இன்றளவும் நாம் இவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் அதற்குக் காரணமே அவர் அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர்.

ஏழை, எளியோருக்கு உதவக்கூடியவர். அவர் பசி என்று யாராவது வந்தால் வயிறாற சாப்பாடு போட்டு அனுப்பும் பெருந்தகையாளர். இவருக்குப் போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு ஏன் திடீரென உடல்நலம் குறைய வேண்டும்? கம்பீரமான பேச்சை இழக்க வேண்டும் என்று அனைவரையும் ஆதங்கப்பட வைக்கிறது.

Related Articles
Next Story
Share it