Categories: latest news

இதை பெருமைனு சொல்றதா? பந்தானு சொல்றதா? எந்த நடிகரிடமும் இல்லாத ஒன்னு.. கெத்து காட்டும் விக்ரம்

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுக்கு என ஒரு தனி கிரேஸ் இருந்து வருகிறது. ரஜினி கமல் விஜய் அஜித் என அவர்கள் ஒரு இடத்தை நோக்கி பயணப்பட்டாலும் நடிகர் விக்ரம் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரை பின்பற்றி ஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். படங்களில் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது .கமலுக்கு அடுத்தபடியாக தனது கெட்டப்பை விதவிதமாக மாற்றி அமைத்து நடிக்கக்கூடிய ஒரு தன்னிகரற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார் விக்ரம்.

படத்தில் பார்ப்பதற்கும் நேரில் இவரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. படத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். ஆனால் நேரில் ரசிகர்களுடன் ரசிகராக இணைந்து அவர்களுடன் எளிதில் ஜெல் ஆகக் கூடிய ஒரு ஜாலியான நபர்தான் விக்ரம். இவருடைய ஸ்டைலுக்கு என ஒரு தனி மாஸ் இருந்து வருகிறது .

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் எந்த நடிகர்களும் செய்யாத ஒரு விஷயத்தை விக்ரம் செய்திருக்கிறார். அதாவது சினிமாவை பொறுத்த வரைக்கும் கேரவன் என்ற ஒரு கல்ச்சர் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் கேரவன் என்ற ஒரு வசதியே கிடையாது.

சூட்டிங் முடித்துவிட்டு ஒட்டுமொத்த நடிகர் நடிகைகளும் ஒரு மரத்தின் அடியிலோ அல்லது ஓரமாகவோ நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு ஜாலியாக அரட்டை அடித்த காலம் உண்டு. ஆனால் இப்போது இந்த கேரவன் வசதி வந்த பிறகு தன்னுடைய ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று விடுகின்றனர். இதனால் ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் விக்ரம் மட்டுமே சொந்தமாக கேரவனை வைத்திருக்கிறாராம் .அந்த கேரவனின் மதிப்பு கிட்டத்தட்ட மூன்றை கோடி என சொல்லப்படுகிறது. வேறு எந்த நடிகர்களுமே சொந்தமாக கேரவன் வைக்கவில்லையாம். இதற்கு முன்பாக சத்யராஜ் மட்டுமே டெம்போ ட்ராவலரில் ஒரு கேரவன் வசதி அமைத்து அதை பயன்படுத்திக் கொண்டு இருந்தாராம்.

அவருக்கு பிறகு இப்போது விக்ரம் தான் சொந்தமாக கேரவனை பயன்படுத்தி வருகிறார் என கேரவன் அருணாச்சலம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற சினிமாக்களில் அனைத்து நடிகர்களும் சொந்தமாக கேரவனை பயன்படுத்தி வருகிறார்கள். தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் எனக்கு தெரிந்து விக்ரம் மட்டுமே சொந்தமாக கேரவன் வைத்திருக்கிறார் என கேரவன் அருணாச்சலம் கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

13 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

20 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago