Categories: latest news

நீ இல்லன்னா இந்த படமே இல்ல!. வில்லன் நடிகரிடம் சொன்ன ரஜினி!.. அட அந்த படமா?!…

Jailer: சினிமா என்பது கூட்டு முயற்சிதான். இயக்குனர், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என எல்லோரின் கூட்டு முயற்சியில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது. அப்படி உழைத்து வெளியாகும் ஒரு திரைப்படம் வெற்றி என்றால் அதன் கிரெடிட் எல்லோருக்கும் போகும். ஆனால், தோல்வி என்றால் நடிகரையும், இயக்குனரையும்தான் கை காட்டுவார்கள்.

ரஜினி வில்லன்: பல வருடங்கள் ஆகியும் இது இன்னமும் மாறவில்லை. ஆனால், சில நடிகர்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது என்பதை புரிந்து நடந்துகொள்வார்கள். அதில் முக்கியமானவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் காட்சிகளும் சிறப்பாக வரவேண்டும் என மெனக்கெடுவார்.

ரகுவரன்: ரஜினி படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். 80களில் ஜெய் சங்கர், செந்தாமரை,சத்தியராஜ் போன்றவர்கள் ரஜினிக்கு வில்லனாக நடிக்க 90களில் ரகுவரன் வந்தார். அப்படி பாட்ஷா படத்தில் ரகுவரன் செய்த அதகளம் இப்போது வரை பேசப்படுகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு வில்லன் எவ்வளவு முக்கியம் என்பதை பாட்ஷாவை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இப்போதெல்லாம் மற்ற மொழிகளிலிலுருந்து தமிழ் படங்களுக்கு வில்லனை இறக்குமதி செய்கிறார்கள். பெரும்பாலும் மும்பையிலிருந்து வில்லன் நடிகர்கள் வருகிறார்கள். ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் மலையாளத்திலிருந்து விநாயகனை கொண்டு வந்தார்கள்.

விநாயகம்: இவர் பல வருடங்களுக்கு முன்பு விஷாலின் திமிறு படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்திருக்கிறார். நிஜ வாழ்விலும் மதுபோதையில் பல இடங்களில் தகராறு செய்து போலீஸ் நிலையத்திற்கு போய்விட்டு வருவார். ஜெயிலர் படத்தில் மலையாளம் கலந்த தமிழ் பேசி மிரட்டியிருந்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய் விநாயகம் ‘ஜெய்லர் படத்தில் ரஜினி சாருடன் நடிக்கும்போது ஒரே பதட்டமாகி உடம்பெல்லாம் நடுங்கிடுச்சி.. அப்போது ரஜினி சார் என்னை அமைதிப்படுத்தி ‘இந்த வர்மன் இல்லனா இந்த ஜெய்லர் இல்ல’ என சொல்லி என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்’ என சொல்லியிருக்கிறார். ஒருபக்கம், ஜெயிலர் 2 விரைவில் உருவாவுள்ளது. இதில் வில்லன் யார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago