Actor vishal: பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருபவர் விஷால் செல்லமே என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் சண்டக்கோழி, திமிறு போன்ற படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வந்தார். இவரின் அப்பாவே பிரபல தயாரிப்பாளராக இருந்ததால் விஷாலும் தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வந்தார்.
ஒருபக்கம் சிம்புவை போலவே இவர் மீது பல புகார்கள் இருந்தது. ஷூட்டிங்குக்கு சரியாக வரமாட்டார், ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்க மாட்டர், ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் இவருக்காக காத்திருந்தால் விஷால் வீட்டில் தூங்கி கொண்டிருப்பார் என்றெல்லாம் சொல்லுவார்கள்.
விஷால் தொடர் வெற்றி படங்களை கொடுக்கும் நடிகர் இல்லை. அதுவும் கடந்த சில வருடங்களாகவே அவரின் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மட்டுமே அவருக்கு ஹிட் அடித்தது.
மதகஜ ராஜா: தற்போது விஷால் எந்த படத்திலும் நடிக்கவிலை. இந்த நிலையில்தான் சுந்தர்.சியின் இயக்கத்தில் அவர் 12 வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜ ராஜா படம் கடந்த 12ம் தேதி வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் விஷாலை பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனெனில், மைக்கை பிடித்திருந்த அவரின் கைகள் நடுங்கிகொண்டே இருந்தது. அதோடு, பேசமுடியாமலும் சிரமப்பட்டார். அவருக்கு காய்ச்சல் என்று மேடையில் சொன்னார்கள்.
இதனைத் தொடர்ந்து ‘விஷாலுக்கு என்னாச்சி?’ ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் அக்கறை காட்டினார்கள். ஒருபக்கம், மதகஜ ராஜா படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டும் அடித்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விஷாலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. மருத்துவர்களின் சிகிச்சையை விட இந்த வெற்றி மனரீதியாக அவருக்கு உந்துதலை கொடுத்துள்ளது.
பாடகராக விஷால்: இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விஷால் ‘மதகஜ ராஜா படத்தில் நான் பாடிய மை டியர் லவர் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே, விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் நான் அந்த பாடலை பாடவிருக்கிறேன். இதுதான் என் முதல் கான்சர்ட்.. இது நான் கனவிலும் நினைத்திராத ஒன்று.. ரசிகர்கள் கல்லெறிய மாட்டார்கள் என நம்புகிறேன்’ என சொல்லியிருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் இந்த நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…