ரஜினியின் நடிப்பில் கடைசியாக ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெய்லர். ஜெய்லர் திரைப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அண்ணாத்த படத்திற்கு பிறகு ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ரஜினிக்கு ஜெய்லர் திரைப்படம் ஒரு வரப்பிரசாதமாகவே மாறியது. அதுவும் பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு நெல்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அதன் தாக்கமும் ஜெய்லர் படத்தில் இருந்தது. ரஜினிக்கும் தோல்வியை கொடுத்துவிடுவாரோ என்ற பயம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றிய ஜெய்லர் திரைப்படம் பெற்றது. கமலை வைத்து எப்படி விக்ரம் என்ற மாபெரும் ஹிட்டை லோகேஷ் கொடுத்தாரோ அதே போல் ரஜினிக்கு இந்தப் படம் அமைந்தது.
கிட்டத்தட்ட 700 கோடிக்கும் மேலாக இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் வெளியானது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் இறங்கிவிட்டார் என்று சமீபத்தில் யோகிபாபு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறும் போது நெல்சன் இயக்கிய அனைத்துப் படங்களிலும் அதாவது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெய்லர் என அனைத்திலும் நான் இருப்பேன் என கூறினார். இதை குறுக்கிட்டு பேசிய தொகுப்பாளர் ஜெய்லர் 2விலும் இருக்கீங்களா? என்று கேட்டார்,
அதற்கு யோகிபாபு ஆமா என்று வாய்தவறி சொல்லியதோடு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய சீக்கிரம் வரும் என்று தெரிவித்தார். மேலும் இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்றுதான் இயக்குனர்கள் ஆளில்லாத இடத்திற்கு சென்று ஸ்கிரிப்ட் வேலைகளை பார்க்க சென்று விடுகின்றனர் என்றும் கிண்டலாக கூறினார்.
அவர்கள் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்களோ இல்லையோ நீங்கள் அதற்கு முன் எழுதி விடுகிறீர்களே என்றும் கிண்டல் செய்தார். ரஜினி இப்போது வேட்டையன் திரைப்படத்தை முடித்துவிட்டு கூலி திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். கூலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு வேளை ஜெய்லர் 2வில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…