Categories: latest news

சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி.. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

பூனைக்கண் புவனேஸ்வரி:

ஒரு காலத்தில் பூனைக்கண் புவனேஸ்வரி என்றால் அப்படி ஒரு பிரபலமாக இருந்தார். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மயக்கிய நடிகையாக தான் புவனேஸ்வரி இருந்தார். அவருடைய சிறப்பு அம்சமே அவருடைய கண். அதில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. பெண்கள் கூட அவருடைய அழகில் மயங்கி போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு அழகான முகம் கொண்ட நடிகையாகவும் இருந்தார் .ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்த புவனேஸ்வரி பாய்ஸ் படத்தின் மூலமாகத்தான் வெள்ளி திரையில் நுழைந்தார் .

முதல் படத்திலேயே தன்னுடைய கவர்ச்சியை காட்டி அனைவரையும் தன் பக்கம் இழுத்தார். அதன் பிறகு கந்தா கடம்பா கதிர்வேலா என்ற திரைப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கிளாமர் காட்டி நடித்தார் என்றால் தெலுங்கில் காமெடியுடன் கவர்ச்சியை காட்டி நடித்தவர் புவனேஸ்வரி. ஒரு கட்டத்தில் இவருடைய மவுசு அதிகமாக தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

bhuvaneshwari

கிளாமர் நடிகை:

பெரும்பாலும் கிளாமர் நடிகை என்றே இவர் முத்திரை குத்தப்பட்டார். அதனை தொடர்ந்து பாலியல் ரீதியான பிரச்சனையில் சிக்கி நீதிமன்றம் வரை சென்று கடைசி வரை போராடினார் புவனேஸ்வரி. அதன் பிறகு இவரை படங்களில் பார்க்கவே முடியவில்லை. நீண்ட நாளுக்கு பிறகு இப்போதுதான் மீடியாக்களில் தலைகாட்டி வருகிறார் புவனேஸ்வரி. அதுவும் ஒரு முழு ஆன்மீகவாதியாக இப்போது மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் அன்னதானம் கொடுக்க ஆரம்பித்த இவர் அதன் பிறகு அம்பாளின் அனுகிரகத்தால் இப்போது ஆன்மீகவாதியாக மாறிவிட்டேன் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

நான் ஆன்மீகத்தை தேர்ந்தெடுக்கவில்லை. ஆன்மீகமும் அம்பாளும் தான் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. அவர்களுடைய அனுக்கிரகத்தால் தான் இப்போது ஒரு கோயிலை கட்டி இருக்கிறேன். இப்போது படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் நான் நடிக்க மாட்டேன். இதுதான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. பெண்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்றால் திருமணம் என்பதை யோசித்து முடிவெடுங்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவாக இருக்கும் என கூறி இருக்கிறார்.

கணவரை பிரிந்த துயரம்:

ஏனெனில் இவர் காதலித்து திருமணம் செய்தவர். காதலிக்கும் போது இருந்த அன்பு திருமணத்திற்குப் பிறகு கிடைக்கவில்லை என்பதால் கணவருடன் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார் புவனேஸ்வரி. இவருக்கு ஒரே ஒரு மகன். சிறுவயதாக இருக்கும் போதே அவருடைய கணவர் புவனேஸ்வரியை பிரிந்து சென்று விட்டாராம் .ஒரு சிங்கிள் அம்மாவாக தன்னுடைய மகனை இவர்தான் வளர்த்து ஆளாக்கி இருக்கிறார் .இப்போது இவருடைய மகன் அட்வகேட்டாக இருக்கிறாராம். இவருடைய குடும்பம் பெரிய குடும்பம். அப்போதிலிருந்து இப்போது வரை புவனேஸ்வரி மட்டும்தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதுகாத்து வருவதாக சொல்லி இருக்கிறார்.

வருமானம் என்பது இவருக்கு மூன்று வீடு இருக்கிறதாம் .அந்த மூன்று வீட்டையும் ஷூட்டிங்கிற்கு விட்டு விட்டாராம். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் செலவு செய்து கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார் .சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து மிகப்பெரிய பிரபலத்தை தேடினார் புவனேஸ்வரி. ஆனால் வில்லி கேரக்டரில் நடித்த பிறகு மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இனிமேல் வில்லி கேரக்டர் நடிக்க கூடாது என்ற முடிவெடுத்தவர் .

bhuvaneshwari

வில்லி கேரக்டர்:

ஏனெனில் அவரைப் பார்த்து திட்டாதவர்களே இல்லை. அப்படி ஒரு கொடூரமான வில்லியாக சீரியல்களில் நடித்தார் .அதன் பிறகு ஒரு பெரிய நடிகர் இவரிடம் வந்து நம்பியாரை பற்றி கூறியிருக்கிறார். அவர் எவ்வளவு பெரிய நல்ல மனிதர். ஆனால் அவர் நடித்தது எல்லாமே வில்லன் கேரக்டர் தான் .அதனால் ஒரு கேரக்டரை கேரக்டராக மட்டும் பார் என சொல்லி புரிய வைத்தாராம் .இப்படி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்களை அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் புவனேஸ்வரி.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago