‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ ல் நடிக்க ஆசை.. சிம்புவுக்கு வலைவிரித்த நடிகை

சினிமாவில் இப்போது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. தற்போது கமல் மணிரத்தினம் கூட்டணியில் தயாராகி வரும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அவருடைய கம்பேக் இந்த சினிமாவில் ஒரு சரியான அடித்தளத்தை உருவாக்கியது.

அந்தப் படத்திற்கு பிறகு பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து மக்களை உற்சாகத்தில் வைத்திருந்தார் சிம்பு. அதன் பிறகு ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படம் பட்ஜெட் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜ்கமல் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தை தானே தயாரிக்கிறேன் என சிம்பு சொல்ல ஒரு வேளை அடுத்த வருடம் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று தெரிகிறது.

இவருடைய ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் காதல் கதைகளை மையமாகக் கொண்டே வெளிவந்திருக்கின்றன .அதில் ஒரு சில படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. ஒரு சில படங்கள் தோல்வியடைந்து இருக்கின்றன. அந்த வகையில் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சிம்புவின் காதல் படங்களில் ஒன்று விண்ணைத்தாண்டி வருவாயா.

சிம்பு திரிஷா இணைந்து நடித்த அந்தப் படம் இளசுகளை வெகுவாக கவர்ந்த திரைப்படமாக அமைந்தது. மேனன் இயக்கத்தில் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. காதலர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்? எப்படி காதலிக்க வேண்டும் என்பதை படம் பார்த்தவர்களுக்கு உணர்த்தி இருப்பார் கௌதம் மேனன்.

அதற்கு ஏற்ப சிம்பு திரிஷா இவர்களின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் படம் ஒருவேளை வெளியாகலாம் என்றும் பல பேட்டிகளில் கௌதம் மேனன் கூறியிருக்கிறார்,

இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அந்தப் படத்தில் நான் நடிப்பேன் எனக் கூறியிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகை துஷாரா விஜயன். சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் துஷாரா விஜயன்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடித்தது ஒரு சில படங்கள் மட்டுமே. ஆனால் அந்தப் படங்களும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்த கதாபாத்திரமாகவே அமைந்திருக்கின்றன. இவர்தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் நான் நடிப்பேன் எனக் கூறி இருக்கிறார். மேலும் சிம்புவை பற்றியும் அவர் பெருமையாக கூறியிருக்கிறார்.

Related Articles
Next Story
Share it