Categories: latest news

அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜான்விகபூரா? எப்பா அது கதிகலங்க வைத்த படமாச்சே

எத்தனையோ திகில் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பெரிய அளவிலும் பயமுறுத்தாத அச்சுறுத்தாத வகையில் இருந்தாலும் பார்க்கும் ரசிகர்களை திகில் அடைய வைத்த திரைப்படம் என்றால் அது ஈரம் திரைப்படம் தான். அறிவழகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆதி ஹீரோவாக நடித்திருப்பார்.

தண்ணீரை மையமாக வைத்து இந்தப் படம் முற்றிலுமாக ஒரு த்ரில்லிங்கான படமாக வெளியாகி இருக்கும். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தான் இப்போது தயாராக போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பரமஹம்சா.

ஈரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதே ஒளிப்பதிவாளர் பரமஹம்சாதான் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் உருவாகப் போவதில்லையாம். ஹிந்தியில் தான் இதனுடைய இரண்டாம் பாகம் தயாராக போகிறதாம்.

தமிழில் ஈரம் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஹீரோயினை சுற்றியே படத்தின் கதை அமைந்திருக்கும். அதைப் போல இதனுடைய இரண்டாம் பாகத்தில் ஹிந்தியில் ஹீரோயினாக நடிக்கப் போவது ஜான்வி கபூர் என தெரிகிறது. இதுவரை தமிழில் எந்த ஒரு படங்களிலும் நடிக்காத ஜான்வி கபூர் தமிழில் வெளியான இந்த படத்தின் ஹிந்தி இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்.

இதுவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் ஈரம் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம். அதனுடைய இரண்டாம் பாகம் எந்த அளவு உருவாகப் போகிறது என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இது தமிழில் தயாரானால் கூட நன்றாக இருக்கும். ஏன் இரண்டாம் பாகத்தை ஹிந்தியில் எடுக்கப் போகிறார்கள் என்றும் பல பேர் கேட்டு வருகிறார்கள்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

5 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

12 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago