Categories: latest news

அந்த டிரஸ் போட மாட்டேனு சொன்னதுக்கு ஹீரோ சொன்ன வார்த்தை! சினிமாவை விட்டே ஓடிய பிரகதி

பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. அவர் நடித்த முதல் தமிழ் படம் வீட்ல விசேஷங்க. இந்த படத்தில் நடித்த தன்னுடைய அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். படப்பிடிப்பின் போது பாக்யராஜ் இடம் நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார் பிரகதி. இந்த படத்தை தொடர்ந்து பெரிய மருது, சும்மா இருங்க மச்சான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடித்த பெரும்பாலான படங்களில் அம்மா கேரக்டர்களிலேயே நடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தமிழை விட தெலுங்கில் தான் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார் பிரகதி. தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இருபதாவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகள் ஆன நிலையில் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார் பிரகதி.

இந்த நிலையில் சினிமாவை விட்டு தான் விலகியதற்கான காரணம் என்ன என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்த படத்தின் பெயரை குறிப்பிடாமல் அதுதான் என்னுடைய கடைசி படம். அதில் ஒரு மழை காட்சியில் முதலில் ஒரு சேலையை கொடுத்து மழையில் நனைந்தபடி ஆடச் சொன்னார்கள். அது எனக்கு ஏற்புடையதாக இருந்தது. அதே காட்சியை மறுநாளும் எடுத்தார்கள். அதில் வேறொரு சேலையை கொடுத்து ஆடச் சொன்னார்கள்.

அது எனக்கு உடன்பாடு இல்லை .ஏனெனில் அந்த சேலை மிகவும் கிளாமராக இருந்தது. அதனால் இதை கட்டிக்கொண்டு ஆட முடியாது என்று சொன்னேன். அதற்கு அந்த படத்தின் ஹீரோ இயக்குனர் என சுற்றி இருப்பவர்கள் முன்னாடி மிகவும் அவமானப்படுத்தி விட்டார்கள். திட்டினால் கூட ஏற்றுக் கொள்வேன் .ஆனால் கேவலமாக பேசினார்கள். அந்த படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவும் ஒரே ஆள் தான் .

pragathi

கேட்க கூடாத வார்த்தை எல்லாம் அந்த ஹீரோ என்னை கேட்டு விட்டார் .அதிலிருந்து இந்த சினிமாவிலேயே இருக்கக் கூடாது என்ற ஒரு முடிவுக்கு வந்து தன்னுடைய இருபதாவது வயதிலேயே சினிமாவை விட்டு விலகி விட்டேன் என பிரகதி கூறி இருக்கிறார். யார் அந்த ஹீரோ எந்த படம் என்பதை பற்றி அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் பிரகதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது ..ஆனால் இதை முற்றிலுமாக பிரகதி மறுத்தார். அது மட்டுமல்ல இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையையும் கண்டித்து பேசி இருந்தார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago