அஜித் ரேஸுக்கும், விருதுக்கும் விஜய் என்ன சொன்னார் தெரியுமா? சுரேஷ் சந்திரா சொல்லும் சர்ப்ரைஸ்…

Published on: March 18, 2025
---Advertisement---

Suresh Chandra: நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் என இருவரும் போட்டி நடிகர்களாக அறியப்பட்டாலும் அவர்களுக்குள் ஒரு ஆச்சரியமான நட்பு இருக்கும் என்பதை பல பிரபலங்கள் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் தளபதி மற்றும் தல என ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வந்தவர்கள் விஜய் மற்றும் அஜித் தான். இருவருமே ஒரே நேரத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள். ஆனால் விஜயிற்கு தந்தை கொடுத்த சப்போர்ட் அஜித்துக்கு கிடைக்கவில்லை.

ஆனால் இருவருமே தொடர்ச்சியாக சினிமாவில் உயர்ந்து வந்தனர். நடிப்பில் கொடிக்கட்ட இவர்களுக்கு ரசிகர்களும் குவிந்தனர். ஒரு கட்டத்தில் போர் போல மாற்றி மாற்றி சண்டை போட்டு கொண்டனர். அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை இத்தனை வருடம் கடந்தும் இன்னமும் முடியவே இல்லை.

ஆனால் இவர்களின் தலைவர்களான அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டி மட்டுமே கொண்டு இருக்கின்றனர். பொறாமை என்பது அவர்களிடமே இல்லை. அடிக்கடி இருவரும் சந்தித்து கொள்வதும் தங்களுடைய நட்பை வளர்த்து கொண்டு தான் உள்ளனர்.

அதற்கு தற்போது ஒரு புது ஆச்சரியத்தை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார். நடிகர் அஜித் துபாயில் நடந்த ரேஸில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தார். தொடர்ந்து சமீபத்தில் அவருக்கு பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு விஜய் தரப்பு எந்தவித வாழ்த்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிடவில்லை. இதனால் அவருக்கு பொறாமை என பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் சுரேஷ் சந்திரா கூறுகையில், அஜித் சார் ரேஸில் வென்ற போது வாழ்த்து சொன்ன முதல் பிரபலம் விஜய் சார்தான்.

அதுமட்டுமல்லாமல் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட போது விஜய் தரப்பில் இருந்து வாழ்த்து வந்துவிட்டது. இருவருமே நெருங்கிய நண்பர்கள். அஜித் சாருக்கு விஜய் சார் வாழ்த்தவில்லை என்பதெல்லாம் உண்மையே இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment