Categories: latest news

‘அமரன்’ படத்துல இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்! நைனானு கூப்பிட இதுதான் காரணமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பயோபிக் என்பதையும் தாண்டி பிசினஸுக்காக செய்த சில விஷயங்களும் படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கின்றன. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் கதைப்படி முகுந்த் வீரமரணம் அடைவார் என்பது அனைவருக்கும் முன்பே தெரியும். ஆனால் அந்த சூழ்நிலைக்குள் ரசிகர்களை எப்படி இயக்குனர் கொண்டு செல்லப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதை மிக அற்புதமாக கொண்டு செலுத்தியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. குறிப்பாக சாய்பல்லவியின் நடிப்புதான் அனைவரையும் ஈர்த்தது.

தன் கணவரான முகுந்த் தனக்கு என்ன நடந்தாலும் அழக் கூடாது என கேட்டு கொண்டதன் பேரில் அழவும் முடியாமல் துயரத்தை தாங்கிக் கொள்ளவும் முடியாமல் சாய்பல்லவியின் நடிப்பு நினைத்தாலே இப்போது வரை புல்லரிக்க வைக்கிறது. இந்த நிலையில் அமரன் படத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினை குறித்து பிரபல விமர்சகர் ராஜவேல் நாஜராஜன் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதாவது படத்தில் எல்லா விஷயங்களும் நன்றாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால் உண்மையில் முகுந்த் ஒரு பிராமணர் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அதை படத்தில் எந்த இடத்திலேயும் இயக்குனர் காட்டவில்லை. அதற்கு மாறாக எந்த சம்பந்தமும் இல்லாமல் அப்பாவை நைனா என கூப்பிட வைத்திருக்கிறார். இதில் இயக்குனருக்கு என்ன மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டது என தெரியவில்லை என ராஜவேல் நாகராஜன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் படங்களில் ஒரு பிராமணரை ஹீரோவாக காட்ட பயப்படுகிறார்கள். அது ஏன் என இதுவரை தெரியவில்லை. நைனா என கூப்பிடுவதன் மூலம் அவர்கள் ஒரு தெலுங்கு பேசுகிற சமூகத்தை குறிப்பதாக காட்டப்படுகிறது. ஒரு வேளை தெலுங்கிலும் படத்தை பெரிய அளவில் கொண்டு போவதற்கு இதை ஒரு வழியாக பயன்படுத்தியிருக்கலாமோ என்றும் யோசிக்க வைக்கிறது.

மலையாளத்தில் வரவேற்பை பெற சாய்பல்லவி படத்தில் இருக்கிறார். தமிழுக்கு சிவகார்த்திகேயன். ஹிந்தியில் ராகுல் போஸ் இருக்கிறார். அதனால் தெலுங்கில் பிசினஸை பெறுவதற்காக நைனா என்பதை பயன்படுத்தியிருக்கிறார்களோ என்று தெரியவில்லை என ராஜவேல் நாகராஜன் கூறினார்.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

35 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

14 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago