Categories: latest news

சூர்யாவை தொடர்ந்து கழண்டு கொண்ட லோகி… என்ட்ரி கொடுக்கும் நயன் தம்பி… SK-வின் அடுத்த ப்ராஜெக்ட்..!

நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் அடுத்த திரைப்படத்திலும் சூர்யாவை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். சுதா கோங்குரா புறநானூறு என்ற திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு இந்த திரைப்படத்தை சூர்யாவின் டூடி நிறுவனமே தயாரிக்க இருந்தது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புறநானூறு திரைப்படம் சற்று பெரிய படம் என்பதால் அதிக கால்ஷீட் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நடிகர் சூர்யாவோ அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால் இந்த திரைப்படத்தில் சூர்யா நடிக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது.

ஏனென்றால் நடிகர் சூர்யா தற்போது தான் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் புறநானூறு திரைப்படத்திற்கு அதிக அளவு கால்சீட் கொடுக்க முடியாத சூழல் உருவானதால் சூர்யா இந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டார். அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு சுதா கோங்குரா முடிவு செய்திருந்தார்.

இதற்கான கதையை சிவகார்த்திகேயனிடம் கூறிய நிலையில் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் லோகேஷ் கனகராஜூம் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அதற்கு அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2 என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவானது.

இதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு முன்னணி நடிகரின் மகனை அணுகி இருக்கின்றார்கள். அதாவது முரளியின் மகனான அதர்வாவிடம் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது அதர்வா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட காரணத்தால் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருவதால் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகின்றது. அதற்கு முன்பாக படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை இயக்குனர் சுதா கோங்குரா செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

13 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

20 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago