விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவியும், பகத்பாசில், வடிவேலு நடித்த மாரீசனும் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படங்களின் வசூல் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
குடும்பத்துல கணவன், மனைவி சண்டையைப் பற்றி தலைவன் தலைவி படத்துல எடுத்துருக்காங்க. இன்னொரு பக்கம் மாரீசன்ல பகத்பாசில், வடிவேலு நடிப்பில் படம் ஸ்லோவா போகுது.
தலைவன் தலைவி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. முழு படமும் கணவன், மனைவி சண்டைதான். ஆனால் அவர்களுக்குள்ள ஏகப்பட்ட அன்பு இருக்கும். ஒரு குடும்ப கதையை எங்கேயுமே தொய்வில்லாம கொண்டு போயிருக்காங்க. டைவர்ஸ் பண்ணனும்னு மனநிலையில் இருக்கிறவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கட்டாயம் மாத்திப்பாங்க.
விஜய்சேதுபதி கேரக்டரே அப்படித்தான். அதனால தான் அவர் கத்திக்கிட்டே இருக்காரு. குடும்பக்கதையை ரொம்ப அழகா எடுக்கக்கூடியவர் பாண்டிராஜ்தான். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி அவர் சொன்னதை எல்லாம் கேட்டுருக்காரு. அதனாலதான் படம் இவ்ளோ சூப்பரா வந்துருக்கு.
மாரீசன் படத்துல வடிவேலுவுக்கு நடிப்பே இல்ல. ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருக்காங்க. அவ்ளோதான். அதனால பெரிசா ஈரக்கல. மாரீசன் படத்துக்கு வசூலே மொத்தமா இந்தியாவுல 75 லட்சம்தான். ஆனா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை பெரிய விலைக்கு வித்துட்டாங்க. அதை வாங்குனவரும் பெரிய விலைக்கு வித்துட்டாரு. அவங்களுக்கு லாபம்தான். ஆனா தியேட்டர் லெவல்ல நஷ்டம். லாபத்துல கொஞ்சம் நஷ்டம். அவ்ளோதான்.
பகத்பாசில் இன்டர்வியு கொடுத்து புரொமோஷன் பண்ணிருந்தா நல்லாருக்கும். வடிவேலு கொடுக்குறதே இல்லை. இந்த ரெண்டு பேரையும் தவிர படத்துல வேற யாருமே இல்லை. அதனால கூட படம் பெரிய அளவில ரீச் ஆகல. தலைவன் தலைவி படத்தோட வசூல் எப்படி இருக்குன்னா சமீபத்தில் வந்த ஏஸ் படம் லைஃப் டைம் பண்ணின வசூலை இது ஒரு நாள்ல பண்ணிருக்கு என்கிறார் அந்தனன்.
தலைவன் தலைவி முதல் நாள் இந்திய அளவில் நாலரை கோடியும், 2வது நாள் ஆறே முக்கால் கோடியும் என மொத்தம் 11.25 கோடியை வசூலித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…