Coolie: சமீபகாலமாகவே ரஜினியை விஜய் ஓவர் டேக் செய்துவிட்டார்.. ரஜினியின் படங்களை விட விஜய் படங்கள் அதிக வசூலை பெறுகிறது. ரஜினியின் சம்பளத்தை விட விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றெல்லாம் பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. அதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளது. ஆனால், நானே எப்போதும் சூப்பர்ஸ்டார் என ரஜினி நிரூபித்துக்கொண்டேதான் வருகிறார். அவரின் ஜெயிலர் படம் 650 கோடி வசூல் செய்தது.
இதுவரை எந்த விஜய் படமும் அவ்வளவு வசூல் செய்தது இல்லை. இத்தனைக்கும் ரஜினியை விட 50 கோடி அதிகமாகவே சம்பளம் வாங்குகிறார் விஜய். கூலி படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் 150 கோடி. ஆனால், கோட் படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் 200 கோடி. ஜனநாயகன் படத்திற்கு விஜய் 225 (சம்பளம் 200 கோடி.. ஜிஎஸ்டி 25 கோடி) வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் கூலி. லோகேஷுடன் ரஜினி கூட்டணி போட்டியிருப்பதால் இப்படத்திற்கு அதிக ஹைப் இருக்கிறது. ஏனெனில், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
அதனால் அந்த மொழிகளிலிருந்து நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா போன்ற முக்கிய நடிகர்களை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். பாலிவுட்டிலிருந்து அமீர்கானையும் கொண்டு வந்திருக்கிறார்கள். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் வியாபாரம் 500 கோடியை தொட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இதில் முக்கிய பங்கு வகிப்பது ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் உரிமைதான். பல வினியோகஸ்தர்கள் மோதியதில் ஹம்ஷினி எண்டெர்டெயின்மெண்ட் சுமார் 86 கோடி கொடுத்து ஓவர்சீஸ் உரிமையை வாங்கியுள்ளனர். அதோடு, 5 கோடி வியாபார செலவும் சேர்த்தால் 91 கோடி வருகிறது.
எனவே, அதற்கு மேல் லாபம் வரவேண்டும் என்பதற்காக கூலி படத்தை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். இதுவரை எந்த தமிழ் பட நடிகரின் படமும் இவ்வளவு வெளிநாடுகளில் ரிலீஸானது இல்லை. எனவே, கூலி படம் மூலம் இந்த பெருமை ரஜினிக்கு வந்திருக்கிறது. ஒருபக்கம் கூலி படத்தின் வியாபாரத்தை பார்த்துவிட்டு ஜெயிலர் 2-வில் நடிக்க ரஜினி 250 கோடி சம்பளம் கேட்பதாக செய்திகள் கசிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…