சமீபத்தில் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷுக்கு இது 50வது படம். அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். பவர் பாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு அவர் இயக்கும் இரண்டாவது படமாக ராயன் திரைப்படம் அமைந்திருக்கிறது.
படத்தை பொறுத்தவரைக்கும் படம் முழுக்க வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக பல மூத்த பிரபலங்கள் கூறி வருகிறார்கள் .ஆனால் இளைஞர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் 100 கோடி வசூலை பெற்றிருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகின்றன. இது உண்மையா என தயாரிப்பாளர் கே. ராஜனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த கே.ராஜன் ‘100 கோடி வசூல் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் படம் ஆவரேஜ் என்றுதான் கூறி வருகிறார்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை. விமர்சனம்தான் பார்த்தேன். கதை சுமாராக இருப்பதாக சொல்கிறார்கள்.’
‘மேலும் இவர்கள் மிகைப்படுத்துவதற்காகவே இப்படியெல்லாம் கூட சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே 100 கோடி என்றால் எனக்கு சந்தோஷம் தான். அதுமட்டுமில்லாமல் தமிழில் வசூல் குறைவு என்றுதான் சொல்கிறார்கள். அதற்கு காரணம் தனுஷ் மீது ரசிகர்களுக்கு நல்ல அபிப்ராயமே கிடையாது.’ என கே.ராஜன் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது தனுஷ் நல்ல ஒழுக்க நெறியுடன் குடும்பம்,குழந்தைகளுடன் சேர்ந்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தால் அவரை பின்பற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் மரியாதை கூடும். அது சினிமா கெரியருக்கும் அவருக்கு ஒரு விதத்தில் உதவும். இதுதான் தனுஷ் மீதான என்னுடைய வருத்தம்.
மற்ற படி அசுரன் மற்றும் கர்ணன் படத்தில் இருந்தே தனுஷ் மீது எனக்கான மரியாதை அதிகமாகிவிட்டது. அவர் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் என்பதை அந்த இரு படங்கள் மூலம் நிரூபித்துவிட்டார். இன்னும் அவர் மென்மேலும் வளர் ஒழுக்க நெறியுடன் இருந்தாலே போதும் என கே.ராஜன் கூறியிருக்கிறார்.
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…
நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…
பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…
தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…