தமிழ் மட்டுமில்லாமல் இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய நாயகன் இந்திய சினிமாவில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது. மேலும் ரோஜா, பம்பாய், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களும் தேசிய அளவில் கவனம் பெற்றன.
அழகான காதல் கதை என்றாலும், மத தீவிரவாத கதை என்றாலும் பக்கா ஆக்ஷன் படம் என்றாலும் அசத்தலாக எடுப்பார். எம்.ஜி.ஆர் – கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கையை வைத்து இருவர் எடுத்து காட்டினார். இதயத்தை திருடாதே, அலைபாயுதே, ஓகே கண்மணி, உயிரே என காதல் ரசம் சொட்ட சொட்ட படம்மெடுக்கும் இயக்குனர் இவர்.
எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் முயன்று எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து காட்டி அதில் வெற்றியும் பெற்றார். அதன்பின் கமலை வைத்து தக் லைப் படத்தை இயக்கினார். 38 வருடங்களுக்கு பின் கமலும், மணிரத்னமும் இணைந்ததால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் படம் வெளீயான பின் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். ரொமாண்டிக் ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக இப்படத்தை மணிரத்னம் உருவாக்கவுள்ளாராம். படத்தின் ஷுட்டிங் வருகிற நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…