Categories: latest news

விக்ரம் , ஜெயிலர், லியோ வந்த பிறகு லைஃபே போச்சு! வருத்தத்தில் பேசிய பாண்டிராஜ்

சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது தலைவன் தலைவி திரைப்படம். விஜய்சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக எந்தப் படங்களும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் தன்னை பற்றி பேச வைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஆனால் இந்த படத்திற்கு பின்னாடி அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதோ அவர் பேசியது:

இந்த மூன்று வருஷம் நான் பட்ட பாடு எங்கேயும் பட்டதில்லை. உதவி இயக்குனராக இருந்த போது பட்ட கஷ்டத்தை விட இயக்குனராக இருந்து இந்த மூன்று வருஷம் நான் பட்ட கஷ்டம் பயங்கரம். மன உளைச்சலாக மன ரீதியாக அசிங்கங்களா அவமானங்களா சேர்ந்து வேலை பார்த்தவர்களுடன் கூடவே நிறைய தயாரிப்பாளர்களுடன் நிறைய வார்த்தைகளை கேட்டுவிட்டேன்.

அதாவது என்னை எப்படி பார்த்தார்கள் என்றால், அப்பொழுது சினிமா மாறுகிறது. விக்ரம் மாதிரியான படங்கள், ஜெயிலர் மாதிரியான படங்கள் லியோ மாதிரியான படங்கள் ஓடும் போது பாண்டிராஜ் இனிமேல் ஊருக்கு போயிரலாம். அவர் படம் ஜெயிக்காது என என் காதுபடவே ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் என பல பேர் பேசியிருக்கிறார்கள். இனிமேல் கடைக்குட்டிச் சிங்கம் எல்லாம் ஓடாது சார்,

இனிமேல் நம்ம வீட்டுப் பிள்ளை ஓடாது. அவ்வளவுதான். அந்தளவுக்கு சினிமா மாறிடுச்சு என எல்லாருமே சொன்னார்கள். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை. இந்த மூன்று வருஷம் தயாரிப்பாளர்கள் இல்லாமல் நான் படம் பண்ணவில்லை என்று சொல்ல முடியாது. எனக்கு மனசுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்திலிருந்து விலகி விடுவேன். சில தயாரிப்பாளர்கள் வேறொரு ஹீரோயினை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் நித்யா மேனன் இருந்தால் நன்றாக இருக்கும் என உறுதியாக இருந்தேன். நிறைய அசிங்கங்களை சந்தித்தேன். ஏன் இந்த படம் பண்ணுவோம் பண்ணுவோம் என நம்ப வச்சு 7 மாதங்கள் கழுத்தை அறுத்தாங்க. ஆனாலும் நான் ஒரு நம்பிக்கையில் இருந்தேன் என பாண்டிராஜ் கூறினார். அந்த நம்பிக்கைதான் இப்போது அவரை மீண்டும் ஜொலிக்க வைத்திருக்கிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago