Categories: latest news

உங்களுக்கு இது தேவையில்லாத வேலை… அமீரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பேரரசு

முருகபக்தர் மாநாட்டிற்கும், திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு இயக்குனர் அமீர் தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது. அவர் சொன்னது இதுதான்.

ஆன்மிகத்தை அரசியலோடு தொடர்புபடுத்தி நடத்தும் மாநாடு ஆபத்தானது. முருகன் எங்களுக்கு எதிரானவர் அல்ல. அவர் பெயரில் அரசியல் செய்வோர்தான் எதிரானவர் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

அமீரின் இந்தக் கருத்துக்கு பேரரசு பதிலடி கொடுத்துள்ளார். அரசியலில் ஆன்மிகம் கூடாது என அரசியல்வாதியோடு நின்று தான் கூவுறீங்க. உங்களுக்கு ஆன்மிகம் பிரச்சனை இல்லை. இந்து மதம்தான் பிரச்சனை. ஓட்டுக்காக சிறுபான்மையினர்னு சொல்றாங்களே… அவங்க எல்லாம் அரசியல்வாதியாக உங்களுக்குத் தெரியலையா?

இந்து மதத்துல இருந்துக்கிட்டு கடவுளை விமர்சிப்பவன் நாத்திகன். கடவுள் நம்பிக்கையோடு ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்தில் மூக்கை நுழைப்பவன் மதவாதி. ஒரு காலத்தில் நாத்திகம் கொள்கையாகவே இருந்தது. அதுவும் இன்னைக்கு அரசியலாகி விட்டது.

அரசியல்வாதியாக இருந்து நாத்திகம் பேசுறவங்களைப் பார்த்து உங்களால் அரசியல்ல நாத்திகம் பேசாதேன்னு சொல்ல முடியுமா? என காரசாரமாக பேரரசு கேள்வி எழுப்பி உள்ளார். அதே வேளையில் ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ்சுக்கும் வேஷம் போடுற அரசியல்வாதிகள் இந்து பண்டிகையை மட்டும் புறந்தள்ளுவது ஏன்? அவங்களுக்கு எதிராக உங்களால குரல் கொடுக்க முடியுமா?

கோவிலுக்குள் வந்த அரசியல்வாதிகள் மசூதிக்குள் போகும்போது நெற்றியில் இருக்குற விபூதியை அழிக்கிறாங்க. குல்லா போடுறாங்க. அவங்ககிட்ட எல்லா மதத்தையும் ஒண்ணா பாருங்க. அரசியல் செய்யாதீங்கன்னு சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரே நான் கிறித்தவன் என்பதில் பெருமையா இருக்குன்னு சொல்றாரே… அவருகிட்ட மதத்தை ஏன் அரசியல் ஆக்குறீங்கன்னு கேட்க முடியுமா?

உங்களுக்கு என்னதான் பிரச்சனை? இந்த மத எதிர்ப்பை அரசியல் ஆக்கினால், அதன் ஆதரவும் அரசியல் ஆக்கத்தான் படும். உங்க மதத்தில் நிறை குறை இருந்தால் அதைப் பற்றிப் பேசுங்க. அடுத்தவர் மதத்துல அறிவுரை சொல்ல வேண்டாம். இது உங்களுக்கு தேவை இல்லாத வேலை என விளாசியுள்ளார் பேரரசு.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

9 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

11 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

12 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

12 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

19 hours ago