விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் கேப்டன் பிரபாகரன். படம் வந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயகாந்துக்கு முன் கேப்டன் என்ற அடைமொழியும் ஒட்டிக் கொண்டது.
விஜயகாந்துடன் சரத்குமார், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன், காந்திமதி, நம்பியார், பொன்னம்பலம் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி. வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். இந்தப் படத்தின் கோர்ட் சீன்ல விஜயகாந்த் பேசுற வசனம் மாஸாக இருக்கும். 1991ல் வெளியானது.
படம் முழுவதுமே அதிரடி தான். இரண்டு பாடல் என்றாலும் தெறிக்க விட்டுருப்பாங்க. பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா என இரு பாடல்கள் உள்ளன. இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் ஃப்ரஷ்ஷா இருக்கும். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் பைட்டும் சூப்பர்.
சந்தனமர கடத்தல் மன்னன் வீரப்பனைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காக ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் போடப்பட்டதாம். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி என்ன சொல்றாருன்னு பாருங்க.
கேப்டன் பிரபாகரன் படம் எடுக்கும்போது எனக்கு 23 வயசுதான். அந்தப் படத்துக்காக ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் போட்டேன். அந்த வயசுல அவ்ளோ தைரியம் வர காரணம் இயக்குனர் மணிவண் ணன் தான். அதுக்கு முன்னாடி வரைக்கும் நான் ரொம்ப பயந்தாங்கோலி. ஆனா அவர்கிட்ட ஒர்க் பண்ணும் போது கத்துக்கிட்டது.
எது இருந்தாலும் படம் எடுக்கலாம். எது இல்லன்னாலும் படம் எடுக்கலாம். அப்படிங்கற தைரியத்தை எனக்குள்ள உருவாக்கி வளர்த்து விட்டது மணி சார் தான் என்கிறார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூலையும் வாரிக் குவித்து 300 நாள்கள் ஓடியது. விஜயகாந்துக்கு இது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிவண்ணனிடம் ஆர்.கே.செல்வமணி உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் புலன்விசாரணை. அதுவும் ஹிட் அடித்தது. விஜயகாந்த் படம்தான்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…