Categories: latest news

இசையா அது? சல்லித்தனமா இருக்கு.. இளையராஜாவை ரிட்டையர்டு ஆக சொன்ன இயக்குனர்

இளையராஜா இப்போது தமிழ் நாட்டின் பெருமையை லண்டன் வரை கொண்டு சென்றிருக்கிறார். சமீபத்தில்தான் சிம்பொனி இசையை லண்டனில் நடத்தி காட்டி மிகப்பெரிய பெருமையை சேர்த்திருக்கிறார். திரையுலகில் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களையும் அன்புகளையும் கொடுத்தனர். ஸ்டாலின் கூட இளையராஜாவுக்கு தமிழ் நாட்டு அரசு சார்பாக ஒரு விழா எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

இது நிச்சயமாக எடுக்கவேண்டிய ஒரு விழாதான். இந்த சினிமாவிற்காக இளையராஜா பண்ற விஷயம் இருக்கே. அது உலகளவு. 50 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் 2 கே கிட்ஸ்களையும் தன் வசப்படுத்தியிருக்கிறார். ஆனால் இப்போது புதுசு புதுசா வந்த இசையமைப்பாளர்கள் இசைக்கும் இசை கேட்கும் அளவுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. இடையிடையே புரியாத சில வார்த்தைகளை போட்டு மக்களை குழப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் ரங்கராஜ் தயவு செய்து இளையராஜா இந்த மாதிரி இசையமைப்பாளர்களிடம் போட்டி போட வேண்டாம். அவர் பேசாமல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்லி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர். இவர் என்ன சொன்னார் என்பதை பாருங்க.

இளையராஜா மியூசிக் நிறுத்தினால் கூட நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. ஏனெனில் இப்போது வெளியாகும் மியூசிக் எல்லாம் கிராமத்து பாஷையில் சொன்னால் சல்லித் தனமாக இருக்கிறது .ஏனெனில் இப்போது மியூசிக் ப்ரொடக்ஷன் தான் நடந்து கொண்டிருக்கிறது. மியூசிக் கிரியேஷன் இல்லை. இந்த ஃபிலிம் மியூசிக் இப்போது வேறொரு ரூபத்தில் போய்க் கொண்டிருக்கின்றது.

முக்கால்வாசி டிஜிட்டல் மையமாக மாறி வருகிறது. இதை சொல்லலாமா என தெரியவில்லை. உள்ளபடியே இப்போது உள்ள பிலிம் மியூசிக்கு இளையராஜா சார் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. இப்படி ஒரு சூழ்நிலை வரும் பொழுது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் அவரை விட மியூசிக்கில் ஜீனியஸ் என யாருமே கிடையாது. அவர் இந்திய அளவில் மிகவும் பாப்புலராக இருந்து இப்பொழுது அகில உலகத்தில் பாப்புலராக கூடிய ஒரு இடத்திற்கு போய்விட்டார் .

உதாரணமாக கிரிக்கெட்டர்ஸ் ரிட்டையர்ட் ஆகிறேன் என சொல்கிறார்கள். இல்லையா. அதைப்போல இவரும் சொன்னால் நல்லது என எனக்கு தோன்றுகிறது. இவருடைய இந்த திறமைக்கு பிலிம் மியூசிக் எல்லாம் லாயக்கே இல்லை. அவர் எங்கேயோ போய்விட்டார். உலக அளவில் போய்விட்டார். அதனால் இந்தியாவின் பெருமையை வெளியே கொண்டு வருவது அவருடைய பொறுப்பு .அவருடைய கடமை. அவரால் மட்டுமே முடியும் என இயக்குனர் ரங்கராஜன் அந்த பேட்டியில் கூறினார்.

ராம் சுதன்

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

28 minutes ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

16 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

17 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

17 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

18 hours ago