எப்படிடா இப்படி எடுத்தீங்க?!.. கங்குவா பார்த்து வியந்து போன இயக்குனர்!. அவரே சொல்லிட்டாரா!..

Published on: November 7, 2024
---Advertisement---

Kanguva: சினிமாவில் புதிய முயற்சிகள் என்பது எப்போதும் வந்து கொண்டே இருக்கும். இயக்குனர்களில் பலரும் எப்போதும் தனக்கு என்ன தெரியுமோ அதிலிருந்து விலக மாட்டார்கள். தேவையில்லாத ரிஸ்க் எதற்கு என நினைப்பார்கள். சில இயக்குனர்கள் மட்டுமே பரிசோதனை முயற்சிகளில் இறங்குவார்கள்.

இதற்கு கமல்ஹாசன், பார்த்திபன் ஆகியோரை சிறந்த உதாரணமாக சொல்ல முடியும். இருவருமே சினிமாவில் புதுப்புது முயற்சிகளை செய்து கொண்டே இருப்பார்கள். சினிமா தொடர்பான எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் கமல் அதை முதலில் தான் நடிக்கும் படங்களில் பயன்படுத்துவார்.

அவரைப்பார்த்து இப்போது பல இயக்குனர்களுக்கும் புதுப்புது முயற்சிகளை செய்து பார்க்கும் தைரியம் வந்துவிட்டது. ஆந்திராவில் மசாலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த சிவா சிறுத்தை படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படமே ஹிட். அடுத்து அஜித்தை வைத்து அவர் இயக்கிய வீரம் படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கினார்.

விஸ்வாசம் சூப்பர் ஹிட்டுக்கு பின் ரஜினியை வைத்து அண்ணாத்த படம் கொடுத்தார். அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் சூர்யாவை வைத்து கங்குவா எனும் படத்தை இயக்கி இருக்கிறார். இது சரித்திரை கதை கொண்ட திரைப்படமாகும். சூர்யாவின் உறவினர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், ஃபிரென்ச் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிலும் திரையிடப்படவிருக்கிறது.

இந்த படம் வருகிற நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே, படத்தை புரமோஷன் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இந்த படம் பற்றி பேசிய சிவா ‘இப்படத்தின் ஹிந்தி வெர்ஷனை கரண் ஜோஹர் சமீபத்தில் பார்த்து ‘இது எப்படி சாத்தியம்?.. ஹாலிவுட் கலைஞர்கள் இதில் வேலை செய்தார்களா?’ என ஆச்சர்யமாக கேட்டார்.

அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை. ஹாலிவுட் இல்லை சென்னை விருகம்பாக்கம் என சொன்னேன். கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விஸ்வல் ட்ரீட்டாக இருக்கும். படத்தில் ஒரு பெரிய கப்பல் வரும். கடல் நீரை கிழித்துக்கொண்டு அந்த கப்பல் வரும் காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்’ என அவர் சொல்லி இருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment