தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய். 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். உண்மையை சொல்லப்போனால் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு இவரின் மார்க்கெட் மதிப்பு இருக்கிறது. ஆனால், அவரோ சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டார்.
விஜய்க்கு முன் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். அவருக்கு பின் கமல் அரசியலுக்கு வந்தார். ஆனால், அவரால் நினைத்ததை செய்ய முடியவில்லை. அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி அறிவித்தார். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி அவர் பின்வாங்கினார்.
இப்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். கட்சி துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. மாநாடு, உறுப்பினர்களை நியமிப்பது, பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் என அரசியலில் செயல்பட்டு வருகிறார். அதேநேரம், அவர் இன்னமும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. ஏனெனில், இப்போது ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார்.
அதேநேரம், திமுக ஆட்சியை மட்டுமே தொடர்ந்து விமர்சனம செய்து வருகிறார். அதிமுக, பாஜக பற்றியெல்லாம் அவர் பேசுவதே இல்லை. திமுகவை மன்னராட்சி என விமர்சித்து வரும் விஜய், 2026ல் திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றே திட்டம் தீட்டி வருகிறார். அவர் நினைப்பது நடக்குமா என்பது தெரியவில்லை. ஒருபக்கம், சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துகொண்ட திவ்யா சத்யராஜ் விஜயை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு எங்கள் உதயநிதி விஜயை போல விமானத்தில் தோழியுடன் ஜாலியாக சுற்றுபவர் அல்ல. மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் இறங்கி வருவார் என பேசியிருந்தார். இந்நிலையில், இப்போது ‘சூர்யா சார் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அத்தனை மாணவர்களை படிக்க வச்சிட்டு இருக்கார். அதனால், அரசியலுக்கு வருவதற்கான தகுதி அவரிடம் இருக்கு.
ஆனால், விஜய் சாருக்கு என்ன தகுதி இருக்கு?.. அவரோட கனவு, ஆசை எல்லாமே முதல்வர் நாற்காலியை நோக்கியே இருக்கு. மக்கள் பிரச்சனை நோக்கி அல்ல’ என விளாசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…