Categories: latest news

மாநாட்டில் விஜய்க்கு பாதுகாப்பு… வெளிநாட்டிலிருந்து இறக்கப்பட்ட பவுன்சர்கள்… காரணம் என்ன..?

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அது மட்டும் இல்லாமல் தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் திடீரென்று தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்து இருக்கின்றார்.

அரசியல் கட்சியை தொடங்கியது மட்டும் இல்லாமல் அதனை முறையாக பதிவு செய்து கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்தார். தற்போது தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கின்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரபாண்டி தொகுதி வி சாலையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்களின் கட்டவுட் தொடங்கி பிரம்மாண்டமான மேடை, பல்லாயிரம் பேர் அமரும் இடம், உணவு வழங்கும் இடம், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. நாளை மாநாடு தொடங்க உள்ளது. இதில் நடிகர் விஜய் இரண்டு மணி நேரம் பேச இருக்கின்றார். அவரின் பேச்சை காண ஏராளமானோர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பொதுவாக பெரிய பெரிய தலைவர்கள் மற்றும் நடிகர்களின் பாதுகாப்புக்கு பவுன்சர்கள் நியமிக்கப்படுவது வழக்கம் தான்.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் பாதுகாப்புக்காக துபாயை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். Gentur எனப்படும் துபாய் நிறுவனத்தை தான் விஜய் தனது பாதுகாப்பிற்காக நியமித்திருக்கின்றார். இந்த நிறுவனத்தின் பவுன்சர்கள் விஜய்க்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் எடுத்து பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

சமீபத்தில் விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா, கட்சியின் கொடி, அறிமுகம் விழா என அனைத்துக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்று பாதுகாப்பு கொடுத்தார்கள். 2004 ஆம் ஆண்டு துபாயில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்புகளை கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் நடிகர் விஜயின் மாநாடு நடைபெற உள்ள திடலை ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த நிறுவனம் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாகவும், ஒரு வாரமாக வெளியாட்கள் யாரையுமே இந்த திடலுக்குள் அனுமதிக்காமல் கடும் கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பு பலப்படுத்தி இருக்கிறார்கள். விஜய்யை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் செல்வது மேலும் நிகழ்ச்சி முடிந்து அவரை பாதுகாப்பாக வைக்கும் வரை இந்த நிறுவனத்தின் பொறுப்பு தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் சுதன்

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago