Categories: latest news

ஜோதிகா செய்த வேலை.. மூக்கறுபட்ட சிவக்குமார்! என்ன மேட்டர் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஜோதிகா. 2000களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக இருந்த ஜோதிகா கோலிவுட்டின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் எந்த நடிகருடன் நடித்தாலும் அவர்களுக்கிடையே இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிக்கும் படியாகவே அமைந்தது.

ஏன் வயதில் இளையவரான சிம்புவுடனும் நடித்தார் ஜோதிகா. சரவணா படத்தில் இவர்களுக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரி அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே அமைந்தது. இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமணத்திற்கு சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தாலும் நீண்ட ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ஜோதிகாவை சூர்யா பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தமிழ் நாட்டின் மருமகள் போலவே மாறினார். மும்பையை சேர்ந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு குடும்ப குத்துவிளக்காக மாறினார். இவருடைய இந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் அனைவரையும் ஈர்த்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமலேயே இருந்தார். ஆனால் இரு குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

அதுவும் தமிழிலேயே நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலேயே நடித்து வந்தார். அதனை எடுத்து மலையாளம், அடுத்து ஹிந்தி என இப்போது பிஸியான நடிகையாக மாறியிருக்கிறார். அதுவும் சமீபத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த ஆடை பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக ஜோதிகாவின் மீது அனைவரின் பார்வை திரும்பியிருக்கிறது.

இதை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா கூறுகையில் ‘ஏன் அந்த கோட்-ஐ பட்டன் போட்டு வரக் கூடாதா? போடலைனா விழாவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? ஹிந்தியில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து ஜோதிகா கவர்ச்சிக்கு இறங்கிவிட்டார்.சமீபத்தில் வெளியான சைத்தான் படத்தில் கூட நீச்சல் குள காட்சியில் நடித்திருந்தார்.’

‘ஒழுக்கத்திற்கு பேர் போன நடிகர் சிவக்குமார். அவரெல்லாம் இதை பற்றி இப்போது கேட்க மாட்டாரா? ஒரு பெரிய நடிகர். அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில்தானே ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தனர். அவர்களின் போனை வாங்கி தூக்கிப் போட்டவர் ஜோதிகாவின் இந்த செயலுக்கு என்ன செய்யப் போகிறார்?’

‘தமிழ் நாட்டின் மருமகளாகவே பார்க்கப்பட்டவர் ஜோதிகா. இங்கு இருக்கிற வரைக்கும் தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான சேலையிலேயே அவரை பார்க்க முடிந்தது. மற்றவர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்தார்.அவரை இப்போது இந்த மாதிரியான உடையில் பார்க்கும் போது கூச்சமாக இருக்கிறது.’ என பத்திரிக்கையாளர் சேகுவாரா கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago