Categories: latest news

மியூசிக்னா என்னன்னே தெரியாதவனுக்கு அவ்வளவு சம்பளமா?.. இளையராஜா கோபப்பட்ட மொமெண்ட்!..

Ilaiyaraja:தமிழ் திரையுலகில் தன்னுடைய இசையால் அனைவரையும் கட்டி போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திரையுலகில் தன்னுடைய இசையை வைத்து மட்டுமே தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டு வருகிறார். அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா தொடர்ந்து 80கள் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி இசை அமைப்பாளராக மாறினார்.

அதுவும் 80கள் காலகட்டம் அவருக்கு ஒரு மிகப்பெரிய சகாப்தமாக அமைந்தது. அந்த அளவுக்கு ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இளையராஜா தான் இசை. இசையமைப்பாளர்களில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை ஒரே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தன்னுடைய சம்பளத்தை ஏற்றி கேட்டிருக்கிறார்.

அதற்கு பல தயாரிப்பாளர்கள் ஏன் இவ்வளவு சம்பளம் உயர்த்தி விட்டீர்கள் என கேட்டதற்கு இசை என்றால் என்ன என்பதே தெரியாத ஒருத்தன் அவ்வளவு சம்பளம் வாங்கும் போது நான் வாங்கினால் என்ன என்று சொல்லி அதன் பிறகு தான் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினாராம் இளையராஜா. அவர் வேறு யாரும் இல்லை டி ராஜேந்திரன். கமல் ரஜினி ஒரு முன்னணி நடிகர்களாக இருந்த போது அந்த சமயத்தில் இளையராஜா தான் மிகவும் பீக்கில் இருந்த ஒரு இசையமைப்பாளர்.

அது மட்டுமல்ல பாலச்சந்தர் மகேந்திரன் எஸ் பி முத்துராமன் இவர்கள் தான் அப்போதைய காலகட்டத்தில் ஒரு முன்னணி இயக்குனர்களாக இருந்தவர்கள் .இப்படி ஒட்டுமொத்த எல்லா துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் டி ராஜேந்திரன். ரஜினி கமல் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது டி ராஜேந்திரன் நடித்த படங்களும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்.

tr

இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு பக்கம் ஹிட்டாகி கொண்டிருக்கும் பொழுது இவருடைய பாடல்களுக்கும் ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுக்க தொடங்கினார்கள். எஸ்.பி. முத்துராமன் மகேந்திரன் இவர்களுடைய இயக்கத்தில் படங்கள் நல்ல வரவேற்பை பெரும்பொழுது டி ராஜேந்திரனும் அவர்களுக்கு இணையாக படங்களை இயக்கி அதிலும் தன்னுடைய திறமையை பதித்தார்.

இப்படி ஒரு பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் டி ராஜேந்திரன். அவருடைய இந்த ஒட்டுமொத்த பெருமை, புகழுக்கு பிறகுதான் அவருடைய சம்பளம் படிப்படியாக உயரத் தொடங்கியது .இதன் காரணமாகவே தான் இளையராஜாவும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டார் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago