Categories: latest news

பாடும் நிலாவையே மிரள வைத்த இசைஞானி… இளமை இதோ இதோ பாடலின் பின்னணி…

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று நெல்லையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருக்க இடம் கூட கிடைக்காமல் நின்றபடி பலரும் ரசித்தனர். மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு முடிந்தது. இசை மழையில் ரசிகர்களை நனைய வைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா என்றே சொல்ல வேண்டும்.

ஆட்டம்: நெல்லை மக்களுக்கு இது புதுசு என்பதால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். ஏஞ்சோடி மஞ்சக்குருவி, காட்டுக்குயிலு போன்ற பாடல்களுக்கு அவர்கள் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது. இளையராஜாவும் அவ்வப்போது சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக ‘ஜனனீ ஜனனீ’ பாடலுடன் தொடங்கிய இளையராஜா அடுத்த பாடலில் ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொண்டு வர நான் கடவுள் ‘ஓம் சிவோஹம்’ என்ற பாடலைப் போட்டார்.

இளமை இதோ இதோ: அதன்பிறகு ரசிகர்களைக் குஷி படுத்த வேண்டும் என்று ஹேப்பி நியூ இயர் இளமை இதோ இதோ என்று கமலின் அக்மார்க் பாடலைப் போட்டார். எஸ்.பி.சரண் பாடினார். இந்தப் பாடலைப் பற்றி இளையராஜா பேசும்போது இந்தப் பாடல் கம்போசிங்கின்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அந்த தகஜிகு தகஜிகுக்கு அவ்வளவு ரிகர்சல் கொடுத்தோம்.

பயந்த பாலு: அவரும் ஒரு கட்டத்தில் பயந்தபடி என்ன இப்படி சொல்றீங்களே என்று ஒரு வழியாக சிரத்தையுடன் பயிற்சி எடுத்து பாடி முடித்தார். அந்த ‘தகஜிகு தகஜிகு’ மட்டும் ஒன்றரை பக்கத்துக்கு நோட்ஸ் வரும். அதைப் பார்த்த போது முதலில் பாலு பயந்தே போய்விட்டார். அப்புறம் நாங்க கொடுத்த உற்சாகத்தில் பாடி முடித்தார். எனக்கு திருப்தி வர்ற வரைக்கும் விடமாட்டேன்.

எஸ்.பி.சரண்: அது பாலுவா இருந்தாலும் சரி. அவங்க மகனா இருந்தாலும் சரி என்று இளையராஜா சிரித்தபடி சொன்னார். அப்போது எஸ்.பி.சரண் சிரித்துக்கொண்டார். அவரும் ‘எங்க அப்பா தான் உங்கக்கிட்ட பாட அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்’ என்றார்.

‘ஏன்… ஜாலியா பாடிட்டுப் போக வேண்டியதுதானே’ன்னு சொன்னார் இளையராஜா. அதான் ‘அந்த தகஜிகு தகஜிகு இருக்குல்ல’ன்னு சிரித்தபடி சொன்னார். பாடும் நிலா என்றால் பாலுதான். அவருக்கே இந்த நிலைமையா என்றே எண்ணத் தோன்றுகிறது.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago