இசைஞானி இளையராஜா தன்னுடைய 82 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களை சொல்ல ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புகைப்படம் எடுத்தவாறு இருக்கின்றனர். அதற்கு முன்னதாக தனது குடும்பத்துடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இளையராஜா கடந்த ஆண்டு தன் மகள் பவதாரணி புற்றுநோயால் இறந்ததால் பிறந்த நாளை கொண்டாடவில்லை.
அதனால் இந்த வருடம் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய உண்மையான பிறந்த தேதி ஜூன் மூன்றாம் தேதி. ஆனால் ஜூன் 3 கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் தனது பிறந்த நாளை இரண்டாம் தேதி ஆக மாற்றி அதை இன்று வரை பின்பற்றி கொண்டாடி வருகிறார் இளையராஜா. திரை பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் ரசிகர்கள் என தொடர்ந்து இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா உட்பட பல அமைச்சர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளின் போது மக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆன செய்தியை கூறியிருக்கிறார் இளையராஜா.
கடந்த வருடம் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்தி காட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தார் இளையராஜா. அது உலகெங்கிலும் பெரிய வரவேற்பை பெற்றது. அதனால் அந்த சிம்பொனி இசையை தன் நாட்டு மக்களும் கேட்க வேண்டும் அதைக் கேட்டு அவர்கள் மேம்படைய வேண்டும் என இளையராஜா ஆசைப்படுகிறார். அதனால் லண்டன் ஆர்கெஸ்ட்ராவை இங்கே வரவழைத்து அதே சிம்பொனி இசையை தமிழில் ரீ கிரியேட் செய்து கொடுக்க இருக்கிறாராம்.
ilaiyaraja
ஆகஸ்ட் இரண்டாம் தேதி தனது ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து அதே சிம்பொனியை இங்கே தன்னுடைய ரசிகர்களுக்காக பண்ண இருக்கிறார் இளையராஜா. இதை கேட்டு நீங்கள் உற்சாகமடைய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…