Categories: latest news

திமிர் ஜாஸ்தி… கர்வம் சர்ச்சைகளுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த இளையராஜா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

தமிழ்த்திரை உலகம் என்றாலே அதுல தவிர்க்க முடியாத நபர் இசைஞானி இளையராஜா. இவருடைய வருகைக்குப் பிறகு திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக 80களைத் தான் தமிழ் சினிமா உலகின் பொற்காலம் என்று சொல்வார்கள்.

வெள்ளி விழா படங்கள்: அது இசைஞானியின் வருகைக்குப் பிறகு தான் நடந்துள்ளது என்றால் மிகையில்லை. அவரது படங்கள் பாடல்களால் புத்துயிர் பெற்றன. பல நடிகர்களுக்குப் படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. இதெல்லாம் ஒருபுறம் இருக்க இளையராஜா இன்று வரை பிசியாக இருப்பதையும் பார்த்து சிலர் அவருக்குத் தலைக்கனம் ஜாஸ்தின்னு சொல்றாங்க. இதுக்கு நீண்டநாள்களாக பதில் சொல்லாமல் இருந்த இசைஞானி இப்போது வாய் திறந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

இசைஞானி இளையராஜாவைப் பொருத்தவரை அவர் தலைக்கனம் பிடித்தவர். ரொம்ப கோபமானவர். திமிர் ஜாஸ்தி என்றெல்லாம் பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம்.

திமிர் ஜாஸ்தி: அவர் மேடைக்கச்சேரிகளில் கூட யாராவது தவறாகப் பாடினால் உடனடியாகத் திருப்பிப் பாடச் சொல்லித் தவறைச் சுட்டிக் காட்டுவார். அந்த வகையில் அவருக்கு உண்மையிலேயே திமிர் ஜாஸ்தியான்னு பலருக்கும் சந்தேகம் வரும். அதற்கு அவர் என்ன பதில் சொல்லி இருக்காருன்னு பாருங்க.

திருவாசகம் இசை: கர்ப்பமா இருந்த பெண்ணின் வயிற்றில் குழந்தை உணர்ச்சியே இல்லாமல் இருந்தது. என்னோட திருவாசகம் இசையைக் கேட்க விரும்பினாள் தாய். அதைக் கேட்டதும் குழந்தை அசைந்தது. கேரளாவில் மதம் பிடித்த யானை ஒன்று என் பாட்டைக் கேட்டுத் தூங்கி விட்டது.

யானைகள் கூட்டம்: டூரிங் தியேட்டர்ல ராசாத்தி உன்ன என்ற என் பாட்டு ஒலிக்க யானைகள் கூட்டமாக வந்து அமைதியாகக் கேட்டுச் சென்றது. இதெல்லாம் அப்பாற்பட்ட சக்தி. அதுக்காக நான் எனக்கு தலைக்கனம், திமிர் பிடிச்சவன்னு சொல்றாங்க. அது சரி. எனக்கு திமிர் வராம வேற யாருக்கு வரும். உலகத்துல யாருமே செய்யாததை நான் செஞ்சிருக்கேன். எனக்கு வராம வேற யாருக்கு திமிர் வரும்?

யாருக்கு திமிர் ?: என்னைப் பார்த்து ஒருத்தன் திமிர் பிடிச்சவன்னு சொன்னா அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? என்னைக் குற்றம் சாட்டுறவங்க எதுவுமே செய்யாம நான் திமிர் பிடிச்சவன்னு சொன்னா எனக்கு கர்வம் வரத்தான் செய்யும். விஷயம் தெரிஞ்சவனுக்கு கர்வம் இருக்காதா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

8 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

9 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

14 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

16 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

17 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

19 hours ago