Categories: latest news

இந்த படத்தில் எனக்கு வேலையே இல்ல!.. கமல் படத்தில் இசையமைக்க மறுத்த இளையராஜா!…

Ilayaraja kamal: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அந்த படத்தில் இடம் பெற்ற ‘மச்சான பாத்தீங்களா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இளையராஜாவின் மண் வாசனை மிக்க இசையில் ரசிகர்கள் உருகிப்போனார்கள். மிகவும் எளிய, மனதை மயக்கும் இனிமையான இசையே இளையராஜா ரசிகர்களிடையே ரீச் ஆனதற்கு முக்கிய காரணம்.

80களில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிக்காக இளையராஜாவை நம்பி இருந்தது. கதை, ஹீரோ, இயக்குனர் என எல்லாம் சேர்த்து 50 சதவீதம் எனில் மீதமுள்ள 50 சதவீத நம்பிக்கை இளையராஜாவாக இருந்தது. அவரின் இசையமைக்க சம்மதம் சொல்லிவிட்டால் படம் ஹிட் என்கிற நிலைதான் அப்போது இருந்தது.

அதனால்தான் ரஜினி, கமல் போன்ற பெரிய ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் இளையராஜா மட்டுமே இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால், சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என பார்க்கவே மாட்டார் இளையராஜா. ஒரு படத்திற்கு இசையமைக்க சம்மதித்துவிட்டால் இனிமையான பாடல்களை கொடுத்துவிடுவார்.

ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், பிரபு, ராமராஜன், சத்தியராஜ், அறிமுக ஹீரோ என எல்லாமே அவருக்கு ஒன்றுதான். பல மொக்கை படங்களையும் தன்னுடைய இசையால் ஓட வைத்தவர் இளையராஜா. இன்றெல்லாம் ஒரு பாடலுக்கு ஒரு மாதம் எடுத்துக்கொள்ளும் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைக்க அரை மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்வார். நடிகர்களில் இளையராஜாவுடன் நெருங்கி பழகியவர் கமல்ஹாசன் என சொல்லலாம். கமல் விருமாண்டி படம் எடுத்தபோது இளையராஜாவிடம் சென்று இந்த படத்தில் நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என கதையை சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது எல்லாமே வன்முறை காட்சிகள்.

இதைக்கேட்ட இளையராஜா ‘இந்த படத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது?. ஒரே சண்டை காட்சிகளாக இருக்கிறது. என்னால் இசையமைக்க முடியாது’ என சொல்லிவிட்டாராம். கமல் அலுவலகம் சென்று தனது உதவியாளர்களிடம் இதை சொல்ல ‘நீங்கள் அவரிடம் சண்டை காட்சிகளை மட்டும் சொல்லி இருக்கிறீர்கள். மற்ற நல்ல காட்சிகளை சொல்லுங்கள்’ என சொல்ல, கமல் மீண்டும் வந்து இளையராஜாவிடம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

‘விருமாண்டி என பெயர் வைத்துவிட்டு இப்படி ஒரு பாடல் இல்லாமலா’ என சொல்லி ‘உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல’ என பாடியிருக்கிறார் ராஜா. டியூனை கேட்டு நெகிழ்ந்து போன கமல் ‘இந்த பாடலுக்கு படத்தில் காட்சி இல்லை. ஆனால், நான் காட்சியை உருவாக்கி இந்த பாடலை வைக்கிறேன்’ என சொல்லிவிட்டு போனாராம். இந்த தகவலை இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

31 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

14 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago