Categories: latest news

கோயிலிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட இளையராஜா.. இசைஞானிக்கு இப்படி ஒரு நிலைமையா?..

இசைஞானி இளையராஜா: உலகம் எங்கும் இருக்கும் தமிழர்களால் இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படுபவர் இளையராஜா. தற்போது வரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் இன்றளவும் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இவரது பாடல்கள் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை உள்ள அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கும் வகையில் இருக்கின்றது.

இவரின் இசையமைப்பில் கடைசியாக ஜமா என்கின்ற திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்து இருக்கின்றார். இப்படத்திலிருந்து வெளியான ‘தினம் தினமும்’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விடுதலை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. தொடர்ந்து சினிமாவில் படங்களுக்கு இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜா இந்த வயதிலும் இசையை தொடர்ந்து கற்று வருகின்றார். 2025 மார்ச் மாதம் 28ம் தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது

சமீப காலமாக அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. அவர் அதிக அளவு தலைக்கணத்துடன் நடந்து கொள்கின்றார். அவர் பாடல்களை யாராவது பயன்படுத்தினால் உடனே காப்பிரைட்ஸ் கேட்டு வழக்கு தொடர்ந்து விடுகின்றார்.

மேலும் தன்னிடம் பாடும் பாடகர்களை மேடையில் வைத்து அசிங்கப்படுத்துகின்றார் என்று பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது. இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றார் இசைஞானி இளையராஜா. 81 வயதாகும் இளையராஜா இன்றும் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கின்றார். அப்போது கருவறைக்குள் அர்த்தமண்டபத்தில் இளையராஜா உள்ளே நுழைந்து சாமி தரிசனம் செய்ய சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கிருந்த அந்தணர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கோவில் கருவறைக்கு வெளியே நின்று அவரை சாமி தரிசனம் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் கருவறைக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து கோவில் மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கருவறைக்குள் அனுமதிக்ப்படாதது ஏன்? என்றும் இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

6 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

8 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

15 hours ago