Categories: latest news

பொன்னியின் செல்வன் 3 எடுக்க போறாங்களா…? அட நம்ம அருண்மொழிவர்மனே சொல்லிட்டாரே!…

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கின்ற நாவலை பலரும் படமாக்க பல முயற்சிகளை செய்தார்கள். ஆனால் அது முடியாத சூழலில் டிராமா பானியில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகம் ஒன்று மற்றும் இரண்டு என வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு திரைப்படங்களை இயக்கி ஒட்டுமொத்தமாக 800 கோடி வரை வசூலை ஈட்டி மிரட்டி விட்டார் இயக்குனர் மணிரத்தினம்.

மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் மட்டும் இல்லாமல் 5 மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலக அளவில் இரண்டு படங்களும் சேர்த்து 800 கோடி வரை வசூல் செய்தது. இந்த திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியதேவனாக கார்த்திக், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்கள்.

இது மட்டும் இல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் முதல் பாகம் திரைக்கு வந்தது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதற்கு அடுத்த ஆண்டு மற்றொரு பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் 70ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகம் ஒன்று பெற்றிருந்தது. இந்த திரைப்படம் வெற்றி தோல்விகளை தாண்டி நம் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 3 விரைவில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த தகவலை நடிகர் ஜெயம்ரவி பகிர்ந்து இருக்கின்றார். நடிகர் ஜெயம் ரவி பிரதர் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது பொன்னியின் செல்வன் பாகம் 3 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது இந்த திரைப்படம் எடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. என்னிடம் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்களுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நீங்கள் பொன்னியின் செல்வன் கதையை எத்தனை பாகங்களாக எடுத்தாலும் அதில் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று கூறியதாக அவர் பேசியிருந்தார். விரைவில் பொன்னியின் செல்வன் 3 தொடர்பான செய்திகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என கூறப்படுகிறது.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago