Categories: latest news

மகனாக நினைக்கும் ஜெயம் ரவிக்கு வேண்டுகோள்.. வேதனையில் அறிக்கையை வெளியிட்ட மாமியார்

ஜெயம் ரவியால் நான் கடன் காரியாகிவிட்டேன் என தற்போது அவருடைய மாமியார் சுஜாதா தெரிவித்திருக்கிறார். அந்த செய்தி தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் .2009 இல் இருந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர்.

இந்த 16 வருட வாழ்க்கையை இப்போது நான் முடித்துக் கொள்ள போவதாக ஜெயம் ரவி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அதற்கு காரணம் என்னை சுதந்திரமாக வாழ விடவில்லை என்றும் மனைவி என்னை சந்தேகிக்கிறார் என்றும் பல குற்றச்சாட்டுகளை அவர் மீது வைத்திருக்கிறார் .ஆனால் ஆர்த்தி அப்படி எதுவும் இல்லை என ஆரம்பத்தில் சொல்லி வந்த நிலையில் இப்போது ஐசரி கணேஷ் இல்ல திருமணத்தில் ஜெயம் ரவியும் கெனிஷாவும் ஒன்றாக வந்ததை பார்த்ததும் இனிமேல் நான் அமைதியாக இருக்க மாட்டேன் என் மகன்களுக்காக போராட போகிறேன் எனக் கூறியிருக்கிறார் ஆர்த்தி.

ஆர்த்தியின் இந்த அறிக்கைக்கு தன்னுடைய பதில் அறிக்கையையும் தெரிவித்து இருந்தார் ஜெயம் ரவி. இந்த நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா ஒரு பதிவில் கூறி இருப்பது என்னவெனில் என் மாப்பிள்ளையை வைத்து அடங்க மறு, சைரன், பூமி போன்ற படங்களை தயாரித்தேன். அந்த படங்களுக்காக பைனான்சியர்களிடமிருந்து 100 கோடி கடன் வாங்கி இருக்கிறேன்.

அதில் ஜெயம் ரவிக்கு 25% ஊதியமாக வழங்கிவிட்டேன். அதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அந்த படங்களின் வெளியீட்டின் போது ஜெயம் ரவியை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இப்போதும் என் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவிக்கு ஒரு வேண்டுகோள். எப்பொழுதும் உங்களை நாங்கள் ஒரு கதாநாயகனாகவே பார்க்கிறோம். ரசிக்கிறோம். நடந்து வரும் பிரச்னையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து தரம் தாழ்த்தி விடுகிறது.

நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும். இது நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று அழைக்கும் அந்த அம்மாவின் ஆசை. என்னுடைய பேரக் குழந்தைகளுக்காக என் மகளும் நீங்களும் சந்தோஷமாக வாழவேண்டும் என விரும்புகிறேன். அழகாக வாழ்ந்த மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்குதான் தெரியும்.

ஊடக நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை என சுஜாதா ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

25 seconds ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

28 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago