Categories: latest news

வேற வழியில்லாம டைவர்ஸ் பத்தி சொல்லிட்டேன்!.. பகீர் காரணம் சொன்ன ஜெயம் ரவி…

Jeyam Ravi: ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. அந்த படம் ஹிட் அடித்ததால் அவரின் பெயருக்கு முன்னால் ஜெயம் சேர்ந்து கொண்டது. துவக்கத்தில் அண்ணனின் இயக்கத்தில் மட்டுமே நடித்தவர் அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தனது கெரியரை வளர்த்துக்கொண்டார்.

ஒரு மினிமம் கேரண்டி ஹீரோவா இருக்கும் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுக்கு நெருக்கமானவர் குஷ்பு. சுஜாதாவின் மகள் ஆர்த்தி ஜெயம் ரவியை விரும்பியதால் ஒரு வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ஜெயம் ரவி அழைத்து சென்ற குஷ்பு கூடவே ஆர்த்தியையும் அழைத்து போனார். அங்கு இருவரையும் பழகவிட்டு ஜெயம் ரவியை காதல் வலையில் வீழ்த்தியதாக சொல்லப்பட்டது.

இருவரின் திருமண வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த போதுதான் சமீபத்தில் மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். வீட்டில் வேலைக்காரனுக்கு இருக்கும் மரியாதை கூட தனக்கு இல்லை என்றும், என்னை சந்தேகப்பட்டு எப்போதும் ஆர்த்தி கண்காணித்துக்கொண்டே இருந்தார் என்றும், என் செலவுக்கு கூட பணத்தை உதவியாளரிடம் கேட்க வேண்டிய நிலையும் எனவும் சொன்னார் ரவி.

மேலும், தனது மாமியார் சுஜாதா தயாரிப்பில் தான் நடித்த சில படங்கள் லாபம் என்றாலும் அதற்கெல்லாம் அவர் நஷ்ட கணக்கை காட்டியதாக புகார் சொன்னார். ஒருபக்கம், இந்த முடிவை தன்னுடன் ஆலோசிக்காமல் ரவி எடுத்ததாக ஆர்த்தி கூறினார். ஆனால், விவகாரத்து என்பதில் ஜெயம் ரவி உறுதியாக இருந்தார்.

இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது ரவி – ஆர்த்தி இருவரும் விவாகரத்து பற்றி நேரில் பேச வேண்டும் என சொல்லப்பட்டது. இதற்கு ஜெயம் ரவி வந்தபோது ஆர்த்தி வரவில்லை. இந்நிலையில், தனது விவகாரத்து பற்றி பேசியுள்ள ஜெயம் ரவி ஒரு புதிய தகவலை சொல்லி இருக்கிறார்.

எனது பிரிவை பற்றி வெளியில் சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதுபற்றி வதந்திகள் பரவ துவங்கிவிட்டது. என்னுடைய படங்களும் அடுத்தடுத்து வெளியாகவிருந்தது. எனவே, வதந்திகள் பரவக்கூடாது என்றுதான் நானே சொல்லிவிட்டேன்’ என சொல்லி இருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

27 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

28 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

31 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago