”இப்படி ஒரு அடிப்படை நேர்மை கூட விஜயிடம் இல்லை. அவர் மட்டுமல்ல அந்தக் கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட மருத்துவமனையில் இருப்பவர்களை சந்திக்க செல்லவில்லை. சொல்லப்போனால் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு முட்டாள் ரசிகர்கள் கூட்டம். போலீஸ் அந்த இடத்திற்கு அனுமதி கொடுத்தது தப்பு”.
”பத்திரிக்கை துறையில் என்னுடைய 40 ஆண்டுகால அனுபவத்தில் transformer-ல் ஏறி நின்று பார்த்தவர்களை நான் பார்த்ததே இல்லை. இந்த மாதிரி ரசிகர்கள் ஏறி நின்றால் அரசாங்கம் என்ன செய்யும்? என்னதான் செய்ய முடியும்? கட்சி அடிமட்டத்திலேயே தப்பாக இருக்கிறது. இவர்கள் தமிழகத்திற்கு alternative கட்சியும் கிடையாது. இவர்கள் வளர்வது தமிழ்நாட்டிற்கு நல்லதும் கிடையாது”.
”எந்தவிதமான norms-ம் இவர்களிடம் கிடையாது. என்னை பொறுத்தவரை தமிழக அரசியல் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு காட்சிதான் தவெக. 1998-ல் ஜெயலலிதாவை பற்றி சொன்ன வாசகம் தான் ஞாபகத்துக்கு வருகிறது அது என்னவென்றால் ’தமிழக அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டிய அசிங்கம்’ தான் தவெக. இதுவரை விஜய் எந்த பொறுப்பும் ஏற்க்கவில்லை அவ்வளவு கல்நெஞ்சக்காரராக இருக்கிறார்”.
”இந்த இடத்தில் கண்டிப்பாக நான் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன். அதாவது கரூர் எஸ்பி மற்றும் கலெக்டரை suspend செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால் முதல் குற்றவாளி விஜய்தான்”. என்று விஜய்யை கடுமையாக விளாசியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…