Categories: latest news

கமலிடம் கோபிநாத் கேட்ட கேள்வி: AI பற்றி என்ன சொல்றீங்க? மனுஷன் பொளந்து கட்டிட்டாரே!

மணிரத்னம், கமல், சிம்பு காம்போவில் விரைவில் வர உள்ள படம் தக் லைஃப். இதனையொட்டி பல்வேறு சேனல்களில் கமல் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகர் கோபிநாத், கமல் இருவரும் உரையாடும் நிகழ்ச்சி ஒன்று வெளியானது. இதில் கமலிடம் ஏஐ குறித்து கோபிநாத் கேள்வி எழுப்புகிறார். அதற்கு கமல் என்ன சொல்கிறார்னு பாருங்க.

ஒரு அம்மாவை யாரோ பேட்டி எடுக்கிறாங்க. ஏஐ தான் என்றாலும் அதன் சாராம்சத்தைப் பற்றிச் நான் சொல்லல. பாடம் தான் என்றாலும் கூட நான் மனப்பாடம் பண்ணல. ஏஐ பற்றி இசைஞானியின் கருத்து என்னன்னு கேட்குறாங்க. உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரியும்னு கேட்குறாங்க. சொன்னாங்க. பேப்பர்ல படிக்கிறதுதான்.

எனக்கு எங்க அம்மா இறந்ததே அப்படித்தான் தெரியும். சொன்னதை வச்சித்தான் தெரியும். நானே ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ்தான். நாம பண்ணின அந்த இன்டலிஜென்ஸ் நம்மளை விட ஆர்ட்டிஃபீஷியலா இருக்கும். நாம தான் அதுக்குக் கத்துக் கொடுக்கணும்னாரு.

எதுவுமே இல்ல. இதைச் சொன்னா அவங்களுக்குப் புரியும். கோடு எழுதுறாங்க. அந்தக் கோடு எழுதுறவங்களுக்குப் புரியும். அதாவது இதெல்லாம் வரக்கூடாது. இந்த பிரிண்டிங் மெஷின்லாம் வரக்கூடாது. கையெழுத்து என்னாகுறது? காரெல்லாம் வரக்கூடாது. மாட்டுவண்டி என்னாகுறது? அப்படின்னு கேட்குறவங்க மாட்டுக்கு சுதந்திரம் கிடைக்குதுங்கறதை யாருமே யோசிக்கிறது இல்ல.

என்னுடைய நண்பர்கள் நிறைய பேரு இயற்கை விவசாயத்துல இருக்காங்க. விவசாயமே இயற்கை இல்லையே. இது எனது எண்ணம். ஆனா நாம வாழும் காலத்துல வாழணும்னா விவசாயம் பண்ணித்தானே ஆகணும். காக்கா வந்து எச்சம் போடும். அதுல விதை விழுந்து காடு வளரும். அப்படின்னு காக்கைக்காகவும், பறவைக்காகவும் காத்துக்கிட்டு இருக்க முடியாது. அதுதான் இயற்கை விவசாயம்.

அதுவாகவே காடாக வருவதுதான் இயற்கை விவசாயம். அதைத்தான் நம்மில் சில பேரு கடவுள்னு சொல்றாங்க. சில பேர் இயற்கைன்னு சொல்றாங்க. அதுல ஊடுருவும் ஆள்தான் மனிதன். அவன் வளரலன்னா விஞ்ஞானம் தாண்டும். வளர்ந்துட்டான்னா எப்படி தாண்டும்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கமல் அமெரிக்காவுக்கு சென்று 6 மாதகாலமாக AI பற்றி படித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago