தமிழ்சினிமா உலகில் வாலிபக்கவிஞர் என்றால் அது வாலிதான். இவர் தமிழ்த்திரை உலகில் நவரசங்களையும் சுட்டிக் காட்டும் வகையில் பல்வேறு இடங்களில் பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். வாலியைப் பற்றி ஒருமுறை நடிகர் சோ வீடியோ ஒன்றில் சில கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். அப்போது அவர் சொன்ன தகவல்கள் தான் இவை.
லௌகீக வாழ்க்கையில் ஆன்மிகம்: கவிஞர்கள் எல்லாம் உணர்ச்சிவசப்படுபவர்கள். எதுவுமே நடுநிலைன்னு கிடையாது. லௌகீக வாழ்க்கையில் ஊறித் திளைத்தவர். ஆனா ஆன்மிகம் பற்றி அருமையா பேசுவார். பணத்தைத் தூசியாக மதிப்பார். ஆனா பணத்துக்காக பாட்டு எழுதுவார். இது ரயில்வே தண்டவாளம் மாதிரி தான்.
அந்த பெரிய திறமை அவருக்கிட்ட இருக்கு. உணர்ச்சி வசப்படாதவனால் கவிஞன் ஆக முடியாது. என்னால அது முடியாது. பாரதியாரும், கண்ணதாசனும் கூட அப்படித்தான் உணர்ச்சிவசப்படுவார்கள். என்கிறார் சோ.
கோபக்காரர்: கலைஞரையும், ஜெயலலிதாவையும் பாராட்டி எழுதுனா அதை ஏன் விமரசிக்கிறீங்க? பாராட்ட வேண்டியதுதானே. அதைத்தானே வாலி செய்திருக்கிறார் என்கிறார் சோ. 1958ல் தமிழ் சினிமா உலகிற்கு வந்து பல தலைமுறை கடந்தும் முன்னணியில் இருந்தவர் கவிஞர் வாலி. ஆனால் அவர் கோபக்காரர். பொதுவாக சினிமாவில் கோபம் உள்ளவர்கள் நிலைத்து நிற்க முடியாது.
ஆச்சரியம்: அந்த வகையில் வாலி ஒரு ஆச்சரியம்தான். ஒரு பக்கம் கோபம் இருந்தாலும், இன்னொரு பக்கம் வளைந்து கொடுக்கக்கூடியவர். மெட்ராஸ் பாஷை, தமிழ் இலக்கணம், பக்தி இலக்கியம், இலக்கியம்னு எல்லாவற்றையும் தொட்டு அசத்தியவர் தான் வாலி. எந்த சூழலைக் கொடுத்தாலும் அவரால் பாடல் எழுத முடியும். அவர் எழுதும் அந்த ஸ்டைல் வேற யாரிடமும் கிடையாது என்றும் சோ தெரிவித்துள்ளார்.
15000 பாடல்கள்: வாலியைப் பொருத்தவரை சினிமா உலகில் 10 ஆயிரம் பாடல்களைத் தாண்டி 15000 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டார். ஆனால் அவர் படித்ததோ பத்தாம் வகுப்பு வரை என்பது ஆச்சரியம்தான். அந்தக்காலத்தில் பத்தாம் வகுப்பு என்பது பெரிய படிப்பு என்று கூட நாம் வைத்துக்கொள்ளலாம்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…