Categories: latest news

கோலிவுட்டின் அடுத்த விவாகரத்து… ரஜினிகாந்தின் மாஸ்ஹிட் நாயகி கணவரை பிரிந்தாரா?

Kollywood: தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விவாகரத்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரபல நடிகை அவருடைய கணவரை பிரிந்து இருப்பதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது.

கோலிவுட்டில் தொடர்ச்சியாக பிரபலங்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமந்தா தொடங்கி தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி என பிரபலங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையில் பிரிந்து கொள்வதாக அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். நாயகியாக இவர் கலக்கியதை விட குணச்சித்திர வேடத்தில் இவர் காட்டிய நடிப்பு பலரை பிரமிக்க வைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் பிரம்மாண்டமாக நடித்து வந்தார்.

இதில் படையப்பா திரைப்படத்தின் நீலாம்பரி கேரக்டரும், பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி கேரக்டரும் ரம்யா கிருஷ்ணனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அவருடைய கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்படி தன்னுடைய துறை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1998 ஆம் ஆண்டு சந்திரலேகா திரைப்படத்தில் நாகர்ஜூனாவுடன் இணைந்து நடித்தார் ரம்யா கிருஷ்ணன். அப்போதிலிருந்தே வம்சியுடன் காதலில் வயப்பட்டார்.

இதைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவங்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் இருவரின் திருமண வாழ்க்கை குறித்து பல தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

அதில் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் ரம்யா கிருஷ்ணனும், ஹைதராபாத்தில் வம்சியும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து வம்சி கூறும்போது, நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. எங்களுடைய வேலை காரணமாகவே தனித்தனியாக வசித்து வருகிறோம்.

இதை விவாகரத்து என கூறுவது வருத்தமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நல்ல மனைவி மற்றும் நல்ல அம்மா அவரை இதுபோல் சொல்லாதீர்கள் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார். முதல் முறையாக கிசுகிசுப்புகளை தாண்டி ஒரு பிரபலம் பிரியவில்லை என அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago