நடிகர் விஜய் தற்போது தமிழ்சினிமா உலகில் ரஜினிக்கு இணையாக 200 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் பெற்று வருகிறார். அவர் தற்போது நடிக்கும் தனது 69வது படம் தான் கடைசி என்றும் சொல்லி இருக்கிறார். அது தவிர அரசியலிலும் தீவிரமாக இறங்க உள்ளார்.
இதற்காக வரும் அக்டோபர் 27ல் பெரிய அளவில் மாநாடும் நடத்த உள்ளார். அரசியலில் மற்றவர்களுக்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன் என்கிற ரேஞ்சில் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
கே.எஸ்.ரவிகுமார் இவரை வைத்து மின்சார கண்ணா என்ற ஒரு படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஒரு புதுமுகத்தை கதாநாயகியாக போட்டதால் தான் படம் சரியாக ஓடவில்லை என்கின்றனர். அப்போது ரம்பா தான் பீக்கில் இருந்தாராம். அதனால் தான் அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்கின்றனர்.
விஜய் படம் ஒன்றைத் தான் மிஸ் பண்ணியதாகவும் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.
விஜயை வைத்து நான் ஒரே ஒரு படம் தான் பண்ணினேன். அது தான் மின்சாரக்கண்ணா. அப்புறம் ஒரு விஜய் படம் மிஸ் ஆனது. ராணான்னு ஒரு படம் பண்ணினேன்.
ரஜினி சார் சிங்கப்பூர் ஆஸ்பிட்டல்ல உடல் நிலை சரியில்ல அட்மிட் ஆகியிருந்தாரு. அப்போ யூனிட்ல இருந்தவங்க எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டாங்க. கேமரா மேன், ரேண்டின்னு வெயிட் பண்ணவங்க எல்லாரும் போயிட்டாங்க. தயாரிப்பாளரே நீங்க போங்க சார்னு சொன்னாரு.
ஆனா நான் மட்டும் போகல அப்போ விஜய் படம் வந்தது. அப்போ நான் விஜய்கிட்ட சொன்னேன். அவரு பாரு அங்கே ஆஸ்பிட்டல்ல படுத்துருக்காரு. அவரு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணாம அடுத்த படம் நான் பணத்துக்கு ஆசைப்பட்டுப் போயிட்டேன்னு சொல்வாங்க.
வேண்டாம். அதுமட்டுமல்ல. அவரு வந்தபிறகு அவரு படம் பண்ணிட்டு வந்தா பரவாயில்லை. இல்ல மறுபடியும் இப்போதைக்கு அவரு படம் பண்ணமாட்டாங்கன்னு சொன்னா கூட பரவாயில்லை.
எதுவுமே தெரியாம நான் இப்போ கமிட் பண்ணினா நல்லாருக்காது. அதான் நான் படம் பண்ணல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…