Categories: latest news

விஜய் பட நடிகை முன்னாடி பேச தயங்கும் நடிகர்கள்.. காரணத்த கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

Meenakshi Chaudhary: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி. ஆரம்ப காலகட்டத்தில் பல் மருத்துவராக இருந்து வந்த மீனாட்சி சவுத்ரி மாடலிங் மீதி இருந்த ஆர்வம் காரணமாக மாடலிங் செய்து வந்தார். பின்னர் வெப் சீரியஸ் களில் நடித்து வந்த இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே மிகச் சிறப்பாக நடித்திருந்தார் மீனாட்சி. அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு பெரிய அளவுக்கு அறிமுகத்தை கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் மீனாட்சி சவுத்ரி. ஆனால் படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படவில்லை. இதனால் மிகப்பெரிய விமர்சனங்கள் எழுந்தது. பலரும் நடிகை மீனாட்சியை கிண்டலும், ட்ரோலும் செய்து வந்தார்கள். இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாக சமீபத்தில் கூட மீனாட்சி கூறியிருந்தார்.

இருப்பினும் இவரை தெலுங்கு சினிமா காப்பாற்றி விட்டது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவந்த சங்கராந்திகி வஸ்துன்னம் என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய பாராட்டை பெற்று இருக்கின்றார். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த படத்திம் குறித்து விளம்பரம் செய்ய இயக்குனர் அனில் ரவிபுடி, வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ராணா தொகுத்து வழங்கி வருகின்றார்.

அப்போது மீனாட்சியை பார்த்து பலரும் கூறியிருந்ததாவது படப்பிடிப்பு தளத்தில் யாராவது பேசினால் சிரித்தால் போதும் மீனாட்சி அவர்களின் பல்லை தான் உன்னிப்பாக கவனித்து பார்ப்பாராம். இவருக்கு பிரேஸ் போட வேண்டும், இவரின் பல்லை கிளீன் செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பாராம். இதனை அவரே கூறி இருந்ததாக அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எல்லாம் தெரிவித்திருந்தார்கள்.

இதே போல் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் நிகழ்ச்சியிலும் கூட பல்லை பற்றி தான் அதிகமாக பேசியிருந்தார் மீனாட்சி. இதனால் அவரிடம் யார் பேசினாலும் அவர்களின் பல்லை தான் உற்று உற்றுப் பார்ப்பாராம் மீனாட்சி. இதனை துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் படம் வெளியிட்ட போது நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார். இதை பார்த்த பலரும் மீனாட்சி முன்பு பல நடிகர்கள் பேசவோ சிரிக்கவோ நிச்சயம் தயங்குவார்கள் என்று கூறி வருகிறார்கள்.

ramya suresh

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

5 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

12 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

13 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago