சினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்து ஒரு இடத்தை பிடிப்பதோ, தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைப்பதோ சுலபமில்லை. எல்லாம் சரியாக அமையவேண்டும். ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஓட வேண்டும். நல்ல தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கதை அமைய வேண்டும். இல்லையெனில் தோல்வியே கிடைக்கும்.
60களில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆருக்கே இது நடந்திருக்கிறது. 30 வருடங்கள் நாடகங்களில் நடித்திருந்தாலும் சிவாஜிக்கு கிடைத்தது போல முதல் படத்திலேயே ஹீரோ வேஷம் எம்.ஜி.ஆருக்கு கிடைக்கவில்லை. சினிமாவில் போராடி நுழைந்து சுமார் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
அதாவது 1940,50களில் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக வலம் வந்த தியாகராஜ பகவாதர், டி.ஆர்.மகாலிங்கம், ரஞ்சன் போன்ற நடிகர்களின் படங்களில் ஒரு முக்கிய வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். ராஜகுமாரி திரைப்படத்தில்தான் எம்.ஜி.ஆர் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார்.
ராஜகுமாரி மட்டுமல்ல. அதன்பின் எம்.ஜி.ஆர் நடித்தது எல்லாமே சரித்திர படங்கள்தான். அந்த படங்களில் புரட்சிகரமான வசனங்களை எம்.ஜி.ஆர். பேசுவார். மேலும், அனல் பறக்கும் கத்தி சண்டைகள் அதில் இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆருக்கு பெரும் வெற்றியை பெற்று கொடுத்த நாடோடி மன்னன் படமும் சரித்திர கதை கொண்ட திரைப்படம்தான்.
ஆனால், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா சமூக படங்களை நோக்கி நகர்ந்தது. சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்கள் அதுபோன்ற கதைகளில் நடித்து வந்தனர். எனவே, எம்.ஜி.ஆரும் சமூக படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு சரித்திர படங்கள் மட்டுமே செட் ஆகும். சமூக படங்களில் அவரால் நடிக்க முடியாது என சிலர் பேசினார்கள்.
எனவே, அறிஞர் அண்ணா எழுதிய ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்கிற கதையில் ஹீரோவாக நடித்தார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்த படம் படுதோல்வி அடைந்தது. இனிமேல் நம்மால் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எம்.ஜி.ஆருக்கே வந்தது. ஆனால், அதன்பின் அவர் நடித்து வெளியான ‘திருடாதே’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து எம்.ஜி.ஆரால் சமூகபடங்களிலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை திரையுலகினருக்கு கொடுத்தது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…