Categories: latest news

அஜித்தை பார்த்து நம்பியார் சொன்ன வார்த்தை.. இப்ப அது நடந்து போச்சே

பொதுவாக ஒருவரை பார்த்ததும் ஏதாவது ஒரு வகையில் அவரை பற்றிய யூகத்தை நம் மனதில் ஏற்றி வைத்துவிடுவோம். ஒருவேளை அப்படிப்பட்டவராக இருப்பாரோ அல்லது இப்படிப்பட்டவராக இருப்பாரோ என பார்த்த உடனேயே யூகித்துவிடுவோம். அப்படித்தான் பழம்பெரும் நடிகரான எம்.என். நம்பியாரும் அஜித்தை பற்றி வருங்காலத்தில் இப்படித்தான் இந்த பையன் வருவான் என அப்பவே சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் நம்பியார். இவரை செல்லமாக நம்பியார் சாமி என்றுதான் அழைப்பார்கள். ஐயப்பன் கோவிலுக்கு பல வருடங்களாக மாலை போட்டு விரதம் இருந்து தரிசித்து வந்தார். குருசாமியாகவே இருந்தார் நம்பியார். இவரை பின்பற்றியே இன்று பெரும்பாலான நடிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஐயப்பனுக்கு மாலை போட்டு சென்று வருகின்றனர்.

எம்ஜிஆரின் ஆஸ்த்தான் வில்லன் நம்பியார். எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் நம்பியார் இருப்பார். நம்பியார் இல்லையென்றால் அது எம்ஜிஆர் படமே இல்லை என்று சொல்லமளவுக்கு அவருடைய முக்கியத்துவம் அந்தப் படத்தில் இருக்கும். எம்ஜிஆரும் நம்பியாரும் வாளை எடுத்து சண்டை போட ஆரம்பித்துவிட்டால் திரையே கிழிந்து விடும். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை திரையில் காண்பிப்பார்கள்.

ஆனால் நிஜத்தில் நெருக்கமான நண்பர்களாகத்தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை கண்டிருக்கிறார் நம்பியார். விஜயின் படங்களில் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார். பூவே உனக்காக படத்தில் அவருடைய காமெடி ரசிக்கும்படியாக இருந்தது. இந்த மாதிரி ஒரு தாத்தா நம் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல வைத்தார்.

இந்த நிலையில் நம்பியாரின் பேரன் ஒரு பேட்டியில் நம்பியார் அஜித்தை பார்த்து ஒரு வார்த்தை சொன்னார் என்பதை பற்றி கூறியிருக்கிறார். அஜித்தின் ஒரு படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நம்பியார் நடித்தாராம். அப்போது அஜித்திடமும் பேசியிருக்கிறார். வீட்டுக்கு வந்ததும் இன்று ஒரு பையனை பார்த்தேன். அவர் கண் நன்றாக இருந்தது. வருங்காலத்தில் மிக உயர்ந்த இடத்துக்கு வருவான் என்று சொன்னாராம்.

ajith

இதை கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் அஜித்தை பார்த்த போது நம்பியாரின் பேரன் அவர் சொன்னதை சொல்லியிருக்கிறார். உடனே அஜித் ‘அப்படியா. ரொம்ப சந்தோஷம்’ என நம்பியாரை பார்த்த அனுபவத்தை பற்றி அஜித்தும் பேசி சந்தோஷப்பட்டுக்கொண்டாராம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

3 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

5 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

23 hours ago