Categories: latest news

ரவிமோகனுக்கும் சிம்புவுக்கும் உண்மையிலேயே என்னதான் பிரச்சினை? ‘தனி ஒருவன் 2’ அவ்வளவுதானா?

ரவிமோகன் ஆர்த்தி பிரச்சினை ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையிலேயே சிம்புவுக்கும் ரவிமோகனுக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. சிம்புவால் இப்போது தனி ஒருவன் 2 படம் தற்காலிகமாக நிற்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரவிமோகனை வைத்து அவரது அண்ணன் மோகன் ராஜா தனி ஒருவன் என்ற படத்தை எடுத்தார்.

படம் மிகப்பெரிய ஹிட். படத்தில் ரவிமோகனுக்கு ஜோடியாக நயன் நடித்தார். அரவிந்த்சாமியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் வெற்றி எப்படியாவது தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என மோகன் ராஜா முயற்சித்தார். அதுவும் நடந்தது. அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. படத்திற்கான அறிவிப்பும் வெளியானது.

அதற்குள் மோகன் ராஜா லூசிபர் படத்தின் ரீமேக்கான காட் ஃபாதர் படத்தை எடுக்க போய்விட்டார். அதனால் தனி ஒருவன் 2 படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மோகன் ராஜாவை பொறுத்தவரைக்கும் தமிழில் அவர் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது.கடைசியாக வேலைக்காரன் படத்தைத்தான் அவர் எடுத்தார். இந்த நிலையில் மீண்டும் தனி ஒருவன் 2 படத்தை எடுப்பார் என்று நினைத்த நிலையில் வேறொரு அப்டேட் வெளியாகியிருக்கிறது.

மோகன் ராஜா திடீரென சிம்புவுக்கு கதை சொல்லியிருக்கிறாராம். அந்த கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்து போக படத்தின் தயாரிப்பாளரை தேடும் பணியில் சிம்பு இறங்கியிருக்கிறார். ஏற்கனவே அமலாக்கத்துறையினரின் பிடியில் ஆகாஷ் பாஸ்கரன் இருப்பதால் சிம்புவின் 49வது படத்தின் தயாரிப்பாளரையும் மாற்றும் பணியில் இருக்கிறார். இப்போது மோகன் ராஜா சிம்பு படத்திற்கும் ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டும்.

தனி ஒருவன் 2 படத்தின் மீது மோகன்ராஜா ஆர்வம் காட்டாதது ஒருவேளை இப்போது ரவிமோகனுக்கும் ஆர்த்திக்கும் இடையே நடக்கும் பிரச்சினையா என்று தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் ரவிமோகன் சிம்பு அடிக்கடி கிளாஸ் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் சிம்புதான் நடிக்க இருந்தது. ஆனால் அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என ரவிமோகன் சொல்லிவிட்டார். அதனால்தான் சிம்பு அந்த படத்தில் நடிக்க வில்லை என்று கூறப்பட்டது.

thanioruvan2

அதே போல் தக் லைஃப் படத்திலும் முதலில் ரவிமோகன் தான் நடிக்க இருந்தார். அதன் பிறகு சிம்பு உள்ளே வந்தார். அதனால்தான் ரவிமோகனும் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் சொல்லப்பட்டது. இப்போதும் இப்படி ஒரு குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

3 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

6 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago