ரவி மோகன் மற்றும் மோகன் ராஜா கூட்டணியில் இரண்டாவதாக உருவான படம் தான் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. அம்மாவுக்கு மகனுக்கும் இருக்கும் பாசம் தான் இந்தப் படம். இதில் ரவி மோகனுக்கு அம்மாவாக நதியா நடித்திருப்பார். அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். முதல் படமான ஜெயம் படத்தின் பெரிய வெற்றி இந்த படத்திற்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தது.
குறிப்பாக ஜெயம் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவும் ரவி மோகனும் தனித்தனியாகத்தான் படம் பண்ண வேண்டும் என நினைத்தார்களாம். ஆனால் மோகன் ராஜாவுக்கு எந்தவொரு படமும் வராததால் மீண்டும் ரவி மோகனை வைத்தே படத்தை எடுக்கலாம் என தெலுங்கு படத்தை ரீமேக் செய்து எம். குமரன் படத்தை எடுத்திருக்கிறார். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஒரிஜினல் வெர்ஷனில் மாற்றம் செய்து இந்தப் படத்தை எடுத்தாராம்.
ரவி மோகனுக்கு ஜோடியாக அசின் இந்தப் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே இளசுகளை வெகுவாக கவர்ந்தார் அசின், இந்த நிலையில் எம்.குமரன் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதனால் படத்தை பற்றி மோகன் ராஜா பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்தப் படத்தில் இரண்டு கேள்விகள் மோகன் ராஜா மனதில் இருக்கிறதாம். ஆனால் அதற்கு யாருமே விடை சொல்ல முடியாதாம்.
அது என்னவெனில் எந்தவொரு தாயும் மகனை விட்டு சாகவேண்டும் என நினைக்க மாட்டார். ஏனெனில் தனக்கு பின் தன் மகன் அநாதையாக போய்விடுவான் என நினைத்து இன்னொருத்தி கையில் புடித்துக் கொடுத்துவிட்டுத்தான் போக வேண்டும் என நினைப்பாள். அப்படித்தான் இந்தப் படத்திலும் தன் மகனை இன்னொருத்தி கையில் புடித்துக் கொடுக்கத்தான் மலேசியாவிற்கு நதியா அனுப்பினாரா?
அல்லது என் புள்ளையை எப்படி வளர்த்திருக்கிறேன் பாருடா என்று தன் புருஷனிடம் காட்ட மலேசியா அனுப்பினாரா? என இப்படி இரண்டு கேள்விகள் இருக்கின்றது. இரண்டிற்குமான பதில் தான் இந்தப் படம். கடைசியில் நீ மட்டும் வரவில்லை என்றால் என்னாகியிருப்பேன் என்று அப்பா வருத்தப்படுவதில் இருந்தே ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் மகனிடம் இருந்து கற்றுக் கொள்ளும் அப்பாவா இந்த கதை அமைந்திருக்கும்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…