Categories: latest news

கோமால இருந்து கண் திறந்ததும் என் பையன் சொன்ன வார்த்தை.. கண்கலங்கிய நாசர்!..

நடிகர் நாசர்: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களை இயக்கி வந்த நாசர் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். அதிலும் இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருகின்றார். தற்போது வரை சினிமாவில் நடித்துவரும் நாசர் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றார்.

நடிகர் நாசரின் மனைவி கமீலா. இந்த தம்பதிகளின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசல். இவருக்கு நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வந்திருக்கின்றார். சிறு வயது முதலே நடப்பது ,பேசுவது என அனைத்துமே அவரைப் போலவே செய்து வந்திருக்கின்றார். பின்னர் அவருக்கு விபத்து ஏற்பட்டு கோமாவுக்கு சென்ற நிலையில் தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து சென்று இருக்கின்றார்.

கோமாவில் இருந்து சுயநினைவுக்கு திரும்பியதும் அம்மா அப்பாவை தேடாமல் நடிகர் விஜயின் பெயரை சொல்லினாராம். இது குறித்து அவர் பேசுகையில் ‘என் மகன் ஒரு கேம் டிசைனர். அவருக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். சைவம் என்கின்ற கேமை அவர்தான் டிசைன் செய்தார். அந்த கேம் ரிலீஸ் செய்த அடுத்த நாள் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அப்போது 14 நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தார்.

சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றேன். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்த நிலையில் சுயநினைவு திரும்பியது. அப்போது அம்மா அப்பான்னு அவர் சொல்லல.. அதற்கு பதிலாக விஜய் என்று சொன்னார். அவனுக்கு விஜய் என்கின்ற நண்பன் இருக்கின்றார். சரி அவரை வைத்து தான் சொல்கின்றார் என்று நினைத்து வரவழைத்தோம். ஆனால் அவர் எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.

அதன் பிறகு தான் புரிந்தது அவர் சொன்னது நடிகர் விஜயை என்று, பின்னர் தளபதி விஜயின் புகைப்படத்தை காட்டியதும் அவனது கண்கள் விரிவடைந்தது. அவனுக்கு விஜயின் நினைவு மட்டும் இருக்கின்றது என்பதை அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டேன். தொடர்ந்து விஜயின் படங்களையும் பாடல்களையும் அதிகமாக காட்டத் தொடங்கினோம். அப்போதுதான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு திரும்பியது.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நடிகர் விஜய்க்கு தெரிய வரவே உடனே என்னை அழைத்து நான் உங்கள் மகனை வந்து பார்க்கலாமா? என்று கேட்டார். நாங்கள் உங்களுக்கு எதற்கு சிரமம் என்று கூறினோம். ஆனால் நான் அவரை கண்டிப்பாக பார்க்கணும் என்று சொல்லி வந்தார். அதுவும் ஒருமுறை அல்ல பலமுறை வந்து பார்த்து இருக்கின்றார்.

அவர்கள் இரண்டு பேரையும் தனியாக விட்டுவிட்டு நாங்கள் அனைவரும் சென்று விடுவோம். அவர் என் மகனுடன் கொஞ்சம் நேரம் அமர்ந்து பேசுவார். அது மட்டுமில்லாமல் என் மகனுக்கு கிட்டார் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு ஒரு முறை அவருக்கு கிட்டாரை வாங்கி பரிசாக வழங்கினார்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார் நாசர்.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago