Categories: latest news

பிரபுதேவாவுடனான காதலுக்கு இவங்கதான் காரணம்… என்ன அம்மணி இப்படி உடைச்சி பேசிட்டீங்க!…

Nayanthara: நடிகர் பிரபுதேவாவை காதலித்தது குறித்து நயன்தாரா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

ஐயா திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. மிகப் பெரிய உச்சத்திற்கு சென்றாலும் அவர் மீது இருந்த விமர்சனங்கள் தான் அதிகம். அதன் காரணமாகத்தான் அவரின் வளர்ச்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்புவுடன் ஆன காதல் முடிவிற்கு பின்னர் நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவாவை காதலிக்க தொடங்கினார். பல இடங்களில் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். பிரபு தேவாவின் பெயரை டாட்டோவாக போட்டுக் கொண்டார்.

இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து பிரபுதேவா தன்னுடைய முதல் திருமணத்தை முடித்துக் கொள்ள நீதிமன்ற படியேறினார். அவருக்கு விவாகரத்து கிடைத்தும், நயன்தாராவுடனான காதல் முறிந்தது. இதை தொடர்ந்து நடிப்பில் மிகப்பெரிய பிரேக் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் மிகப்பெரிய ரீ என்ட்ரியை கொடுத்தார். அதன் பின்னர் அவருக்கு மிகப்பெரிய வளர்ச்சி கிடைத்தது. தனிநாயகியாக அவர் நடித்த எல்லா படங்களுமே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனாலும் சமீப காலங்களாகவே நயன்தாரா நடிப்பில் வெளியாகும் எந்த படங்களும் வெற்றி படங்களாக அமையவில்லை. இதை தொடர்ந்து நயன்தாரா தற்போது அதிக அளவில் வெளியிடங்களில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அவர் அனுபமா சோப்ராவிற்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில் தன்னுடைய துறை வாழ்க்கையில் இருந்த சர்ச்சைகளை பேசியிருக்கிறார். அந்த வகையில் நடிகர் பிரபுதேவா உடன் இருந்த காதல் குறித்தும் நயன் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், சினிமா துறையில் நிறைய இரண்டாம் திருமணங்களை பார்த்து இருக்கிறேன்.

அவர்களை நான் தப்பு சொல்ல விரும்பவில்லை. அந்த நேரத்தில் சினிமாத்துறை அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் இப்படியான உறவுகள் சரியானது தான் என்பது என்னுடைய நிலைப்பாடாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், தான் தப்பே செய்யவில்லை சினிமா துறையால் தான் அந்த காதலையே செய்தேன் என நயன்தாரா பேசியது எப்படி சரியாகும். அப்பொழுது எனக்கு காதல் தேவைப்பட்டது அதை கொடுத்தவர் பிரபுதேவா தான்.

இதனால் தான் அவர் முதலில் திருமணம் ஆனவர் என தெரிந்தும் காதலித்தேன் என்றுதான் நயன்தாரா சொல்லி இருக்க வேண்டும். தற்போது அவர் அப்படி சொல்லி இருந்தாலும் கேட்க ஆள் கிடையாது. ஆனால் அந்த தைரியம் தான் நயனிடம் தற்போது இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

12 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago